Thursday, September 29, 2011

இலக்கியம்

இடிபாடுகளுக்குள் சிக்குண்ட
கண்ணாடி போத்தலாய்
இன்று ...........

குத்திக் கிழித்து
காயப்படுத்த
நினைக்கும் பல மாடிக்கட்டடங்கள் ..............

இலக்கிய 
இருதயம் நொறுங்குண்டு விட்டது

நிலவின் பகிர்வுகள்: தொலைத்ததை தேடல்

நிலவின் பகிர்வுகள்: தொலைத்ததை தேடல்: எங்கு தேடினும் கிடைக்கவில்லை தொலைத்ததாகவும் நினைவில்லை எங்கேனும் எப்படியாயினும்... தொலைக்கவில்லை நன்றாக நினைவிருக்கிறது தொலைந்து போன...

Wednesday, September 28, 2011

தொலைத்ததை தேடல்

எங்கு தேடினும்
கிடைக்கவில்லை
தொலைத்ததாகவும்  நினைவில்லை
எங்கேனும்
எப்படியாயினும்...
தொலைக்கவில்லை
நன்றாக நினைவிருக்கிறது
தொலைந்து போனது
நான் மட்டும் என்று .

ராட்டினம்

சுற்றிச் சுழன்றிடும்
மனித வாழ்வும்
மறைந்திடும் மாயைகளும்
தாவித் திரியும்
வதந்தியும் ஒன்றுதான்
ராட்டினம் சுற்றவிட்டால் தான் என்ன ?

இலக்கியப்பகிர்வு

இலக்கியம் தொடர்பான காத்திரமான கலந்துரையாடல் தேவைப்படுகிறது. இலக்கியவாதிகள் பலர் தம் உள்ளக்குமுறலை வலைத்தளங்களில் வெளிப்படுத்தி இருப்பதை காணலாம் .சங்கப் புலவர்களிடம் காணப்பட்ட மன நிலையே பலரிடம் உள்ளது.என்னிடம் சிறந்த,தன்னடக்கமுள்ள பல இலக்கிய வாதிகள் கேட்கும் கேள்வி "ஏன் நீங்கள் உங்களை அடையாளப்படுத்துவதில்லை ?"

இந்த இடத்தில் எனக்கு நினைவு வருவது ,ஒருமுறை குலோத்துங்க சோழனிடம் சென்ற குமாரப்புலவரும் அவரிடம் மாட்டிக்கொண்டு தவித்த சேவகனும் தான்.குமாரப்புலவனைப்போல் தமது பெருமை பாடும் இலக்கியவாதிகள் பலர் இங்கு. அதனால் அரங்குகளில்  கூட பங்கு பெற நினைப்பதில்லை .நான் மதிக்கும் புலவர் ஜின்னா சரிபுத்தீன் என்னிடம் சொன்னார் "எதற்கு நீ புனைப்பெயரில் எழுத வேண்டும் ம்மா உன் பெயரிலே எழுது என்றார்." அதற்கு காரணமும் சொன்னார் .அவர்கள் சொல்வது உண்மை தான் ஆனாலும் நான் அவரிடம் குமாரப்புலவர் பற்றி சொல்லவில்லை .காயல் பட்டின மாநாட்டிற்கு பிறகு தான் பல விடயங்களை அறியக்கிடைத்தது எனக்கு .

யார் எழுத்தாளன் ?




கையில் பேனை 
எடுத்தவரெல்லாம்  எழுத்தாளனா?
இல்லை -
கண்டதையெல்லாம் -எழுதித் 
தள்ளுபவன் எழுத்தாளனா ?

அலுவலகத்தில்
இலிகிதர் வேலை பார்ப்பவன்
எழுத்தாளனா?
அல்லது 
ஆவலில் இலக்கியம் படைக்க 
எழுதுபவன் எழுத்தாளனா?

சாதனை படைக்க
வேண்டும் என்று எழுதுபவன் 
எழுத்தாளனா?
சோதனையில்-
வேதனையை வெளிப்படுத்த
எழுதுபவன் எழுத்தாளனா? 

தன்னை 
அறிமுகபடுத்த எழுதுபவன்
எழுத்தாளனா?
எழுதியதனால்
முகவரியையே தொலைத்தவன்
எழுத்தாளனா ?

எழுதி எழுதி
தனக்கென இடத்தை
பிடித்தவன் எழுத்தாளனா?
பார்த்து பார்த்து
எழுதி -
பரிசு பெற்றவன் எழுத்தாளனா?

எழுதியதற்கு
அடையாளமாய் நூலொன்றை
உருப்பெறவைத்தவன் எழுத்தாளனா?
அந்நூலினை
விற்பதட்காய் அலைந்தவன்
எழுத்தாளனா ?

எழுத்தாளனுக்காய்
இரங்கற்பா எழுத
யாருமில்லை
 நீயும்
எழுதிப்பார் புரியும்
யார் எழுத்தாளனென்று !


குறிப்பு :இலங்கையில் எழுதாட்டியும் சாகித்திய பரிசு கிடைக்கும்

Tuesday, September 27, 2011

உன் நினைவும் என் தரிசனமும்




என்னில் நிறைந்துவிட்ட 
உன் -நினைவுகளை 
காற்றில் கலந்துவிட்ட 
வாசமாய் 
என் உள்ளம்
சுவாசித்துக்கொண்டிருக்கும் 

உன் சர்வாதிகார 
முறைப்புக்கூட
சோஷலிச புன்னகையை 
நினைவூட்டிக்கொண்டிருக்கும்

உன் வருடல்கள் 
வாழ்வின் 
இறுதிக்கிரியைகளாய்
உலா வந்து கொண்டிருக்கும் 

உன்னால் உண்டான 
காயங்கள் 
ஹிரோஷிமாவை தாக்கிய 
அணுகுண்டாய்
என் இதயத்தில் 
என்றும் வலித்துக்கொண்டிருக்கும் 

சாம்பலாகிப்போன 
உன் நினைவுகளில் 
என் தரிசனம் 
எரித்தாலும் 
மீளெழும் பீனிக்ஸ் பறவையாய்
சிறகடித்துக்கொண்டிருக்கும்  

Monday, September 26, 2011

காட்டான் எனும் நாட்டான்




நகரத்துச் சிலருக்கு 
நாகரிகமாய் உரைக்கவும்
நக்கலாய் அழைக்கவும் 
ஒருவன் -அவன்
காட்டான் எனும் நாட்டான் 


விஞ்ஞானம் படித்து -நகருக்கு  
மெய்ஞ்ஞானம் போதிக்க வந்தவன்
நாட்டான்
வருத்தமெனின் தன் கருமத்தையும் பாராது 
மருத்துவம் பார்ப்பவன் 
நாட்டான்

கட்டிடம் குட்டிச் சுவராகமுன்
அதனை மட்டிட்டவன் 
நாட்டான் 
பட்டணத்தில் பெட்டிக்கடை வைத்து 
காசை கொட்டிக் கொண்டவர்களை
தட்டிக் கேட்காதவன்
நாட்டான்

பாடம் புகட்ட வந்து
பாடம் கற்றுக்கொண்டவன்
நாட்டான்
ஏற்ற இரக்கமின்றி
மாற்றங்களை ஏற்றுக்கொண்டவன் 
நாட்டான் 


வோட்டுக்களை வென்று 
நாட்டுக்கு சேவை செய்பவன் 
நாட்டான்
பாட்டுக்களை கேட்டாலும் 
நாட்டு நடப்புக்களை 
அறிந்தவன் நாட்டான்

கல்விமான்களை கவரிமான்களை 
நினைப்பவன்
நாட்டான்
கல்வியல் கரைகானத்துடிக்கும்
நீச்சல்காரனும்
நாட்டான்

இத்தனைக்குள்ளும்
கிராமத்தில் படித்தவனை
நகரத்துச் சில முட்டாள்கள்
அழைக்கும் வார்த்தையும்
நாட்டான்!!
இவற்றையெல்லாம் அறிந்திராதவனும்

காட்டான் எனும் நாட்டான்

தொட முடியா தொலைவில்



பருந்து போல 
உயருது பால்மா
விருந்து கொடுக்கமுடியா
விலையில் அரிசிமா

அருமருந்தாய்ப் போனது 
மண்ணெண்ணெய் 
வருவலையும்
அவியலாக்கியது தேங்காயெண்ணை 

கறிக்கு புளிமாங்காய் போல் 
தேங்காய் 
சதா சாப்பாட்டில் 
கத்தரிக்காய் 

பொறுக்க முடியவில்லை 
இந்த வாழ்க்கைச் செலவு 
தாக்குப்பிடிக்கவில்லை 
தகுமான வரவு 

தோசைக்கு இனி  இல்லை
சட்னி 
ஏழைகளுக்கு உண்டு 
வாழ்வில் பட்டினி

தேடல்




வசந்த கால 
மேகங்களில் பார்க்கிறேன்
கடந்த கால 
சோகங்களை 
கூடவே  
வேதனையுடன் மீட்டிப்பர்கிறேன் 
வடுக்களை .......
கார்கால தூறல்களின் 
துருக்கள் அதில் படிந்திருக்கின்றன

உயிரோடு பிணமாக



flw; fiuNahuk; miyfspd; ,iur;ry;
,jkhf ,Ue;jJ fhw;W
Kj;jq;fs; gwpkhwp
mtsJ fuq;fisg; gw;wpapUe;Njd;       
md;G nkhop Ngrpdhs;
vy;yhf; ftiyfSfk;
kwe;J Ngha; yapj;jpUe;Njd;
gioa fijfs; nrhd;dhs;
vdf;Fk; fz;fs; fyq;fpd
mts; fz;fs;
,dpnahU NghJk;
fyq;fplnt $lhJ
cWjpahf KbntLj;Jf;nfhz;Nld;
mtis kidtpahf mila
ehd; NgW ngw;wtd; vd;Nwd;
mts; mwpT MSik ijupak;
vy;yhKk; vdf;Fg; gpbj;jd
,iwtdpd; nfhil vd;Nwd;
mtSk; cyif kwe;J
If;fpakhfp ,Ue;jhs;
mtisNa kwe;J nrhd;dhs;
vdf;F NtW njupTfSf;F
mtfhrkpy;iy
fhyk; vid epu;g;ge;j;jpJ
mJ jhd; cz;ik vd;whs;
vdf;F cyfNk ,Uz;L NghdJ
capu; Nghd typ
flw; fiuf;fhw;W njhe;juthdJ
fliyfsw;Wj; njupe;jJ
gpzkhf vOe;Njd;
tPL vd;w fy;yiwf;Fr; nry;y……….

இலங்கையின் எழில்


ஊடகம்


காயல் பட்டின இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் மகளிர் அரங்கில் வாசிக்கப்பட்டது .



இனி வரும் நூற்றாண்டுகள் 
இதன் ஆளுகையில் தான்
ஊடகம்
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் 
குத்திக்கூறு போட
மேற்குலகு
பயன்படுத்தும் பேராயுதம்


நாமெல்லாம் கவனிக்காது
தூக்கிப்போட்ட்         
தாக்குதல் கருவி 
மகிமை புரியாது 
புறந்தள்ளிய கூராயுதம் 
ஊடகம்
இதை 
கையாளத் தெரிந்தவன்  
உலக நாயகன் 
அனைத்தையும் தீர்மானிக்கும் 
அதி உயர் சக்தி.
  
நேற்றைகளைப் புரட்டிப்பார்க்கிறேன் 
உலகத்தூதர் பயன்படுத்திய 
அதி உச்சத்தை கான்கிறேன்
மக்களெல்லாம் ஓன்று திரட்டி 
மலைக்குன்றின் மீது நின்று
நான் இறைவனின் தூதன் 
அல்லாஹ் மட்டுமே இறைவன் 
என்று உரத்து முழங்கிட
அன்று அதி உச்ச ஊடகம்
அரபா மலைக்குன்று 
என் சமூகமே
தூதர் காட்டிய
அழகிய வழிமுறைகளை 
தூரத்தே எறிந்து விட்டு
எப்படி நிம்மதியாக 
தூங்க முடிகிறது?

உன் எதிரிகள் கீலங்கீலமாய்
கிழித்தெறிய கண்ணுற்றும்
எத்தனை நாளைக்குத் 
தொடரும்
இந்த மௌனம்.........?
உனக்கென்றொரு
தினசரிப் பத்திரிகை கிடையாது
வானொலி அலைவரிசை கிடையாது
உனக்கென்றொரு
தொலைக்காட்சி அலைவரிசை கூடக்
கிடையாது...
எப்படி -நீ 
நாளைகளை வெல்லப்போகிறாய்...?


வெறும் உணர்வுகளில் முக்குளித்து
வாய் கிழியக் கத்தினால்
உன் பிரச்சினைகள்
தீரும் என்று
எப்படித் துணிய முடியும் ?

உன் எதிரி
குண்டு வைப்பான்
வெடிக்கச் செய்வான்
பல நூறு உயிர் கொல்வான்

இங்கு -
ஊடகங்களின் வாயில் தீனி 
முஸ்லிம் தீவிரவாதி 
இஸ்லாமியப் பயங்கரவாதி 
எங்கும் தலைப்புச் செய்தி 
'முஸ்லிம் தீவிரவாதிகள் 
குண்டு வைப்பு 
நூறு பேர் கைது "


வெட்கமில்லை உனக்கு 
பிரியாணியில் கைவைக்க 

இன்று வரை சிறையில் வாழும் 
தீவிரவாதியை 
முத்திரை குத்தப்பட்ட 
அப்பாவிகளுக்காக 
என்ன குரல் கொடுத்துவிட்டாய் ?

நாளை முஸ்லிம் உயர்ந்து நிற்பான்
நாளை இஸ்லாம் -
உலகை வெல்லும் -நாளை
நாமெல்லாம் ஆட்சியாளர்கள்
எத்தனை நாளைக்கு
நாளை மீது பாரம் சுமத்தி
கற்பனையில் சரித்திரம் படைப்பது ?


உனக்கென்ன பழமிருக்கிறது இங்கு?
பாபர் மஸ்ஜித்
இடிக்கப்பட்டபோது
கோவையில் அப்பாவிகள்
கைது செய்யப்பட்டபோது
குஜராத்தில் முஸ்லிம்கள்
எரித்துக் கொல்லப்பட்டபோது
உன் -உரிமைகள் 
பறிக்கப்பட்டபோது 
உனக்காக குரல் கொடுக்க 
உனக்கென்றொரு
தனித்துவ 'ஊடகம் '
இல்லாமல் போனது 
உன் ரோசத்திக்கிலரவில்லையா? 
உலக அரங்கில்
உனக்கென்ன பலமிருக்கிறது?
முதல் கிப்லா
முற்றுகை இடப்பட்டபோது
செச்சினியா ,டாகேஸ்தான்
துவம்சம் செயியாப்பட்டபோது
பொஸ்னியா
;நிர்மூலமாக்கப்பட்டபோது 
ஆப்கான் ஈராக் தாய்லாந்து சீனா
என்று 
இன்று வரைத் தொடரும் 
அவலங்களுக்கு ................

உன்
எதிரி தருவதுதான் விளக்கம்
உன்
எதிரி சொல்வதுதான் செய்தி
உன்னைத்தீர்மானிப்பது
எதிரிகளின் ஊடகம்

உன்
குரல் வலை நசுக்கி
சப்தத்தை பறித்து
எதிரி உன்னை கட்டமைக்கிறான் 


என் அருமைச் சமூகமே
இப்போது சொல் ...
உனக்கான தனித்துவ
ஊடகத்தை -எப்போது
நிறுவப்போகிறாய்?

-ஷாமிலா ஷெரிப் -
இலங்கை .

குறிப்பு -மகளிர் அரங்கில் போலி பெண் நிருபர் படம் பிடித்ததால் என் படம் இங்கு இடம் பெறவில்லை


சொல்லாமலே............



எனக்குள் தேங்கிக் கிடக்கும்
ஏக்கப் பெருமூச்சுக்கள்
நைல் நதியாய்ப் பெருக்கெடுக்க
பல தடவை நினைக்கிறது.......
அணை போட்டு
தோற்றுப்போகிறேன்

எதையும் ஆராயாது
எப்படியும் பேசும்
பண்டிதர்கள்...... 
எதுவுமே புரியாது
மாற்றாரின் கதைகளையே நம்பும்
பாமரர்கள்......
தெருவில் பேச்சுக்குப்பை பொறுக்கும்
வேலையில்லாக் கூலிகள்
இவர்களுடன் சேர்ந்து
மொட்டத்தலைக்கும்
முடங்காலுக்கும்
முடிச்சுப்போடும்  
உறவினர்களில் சிலர் 
இவர்களை அறியக்கிடைத்தமை 
என்-
இலக்கியப்பரவளுக்கு கிடைத்த 
மிகப்பெரிய வெற்றி  


யுத்தத்திற்குப் பின் 
எழுதுவதற்கு 
கரு இல்லாமல் தவித்த 
நான் 
இன்று இலக்கியத்திற்கு 
முற்றுப்புள்ளி
 வைக்கமுடியாமல் 
தவிக்கிறேன் .

உடன் போக்கு





காலம் எனும் 
தாளிளொரு 
கவி எழுத நினைகின்றேன் 
இங்கு 
எதிர் காலம் 
உண்டென்பதே சந்தேகம் 
அவ்வாறிருக்க இன்னொரு
ஜென்மம் 
எப்படி வரும் ?
மறக்க நினைத்தாள் 
நீங்காத 
நினைவுச்சின்னம் நீ 
அன்பினால் 
அரவனைக்கப்பட்ட நம்மை 
ஆசையினால்
பிரித்துவிட முடியாது 
உன்னை 
விடிவெள்ளியாய் 
காணும் வரை 
காத்திருக்க முடியாது 
இனி நானும் 
வந்து விடுகிறேன் 
விண் மீனாக 
உன்னுடன்