எனக்கு புதிதல்ல
அதில் -
எத்தனை சுகம்
என்பதுவும்
நான் அறியாததல்ல
என்னில் -நீ
காண்பது
வலிகளல்ல...
உன்னை காணாத
வழிகளில்- என்
விழிகளல்ல
நித்தமும்
காலடிச் சத்தம்
கேட்பெதென்ன?
திரும்பும்
போதெல்லாம்
நிசப்தமென்ன ?
தனித்திருத்தல்
பற்றி நீயும்
காத்திருத்தல்
பற்றி நானும்
ஆய்வு செய்வோம்
எங்காவது
எனது கேள்விகளுக்கு
உனது ஆய்வில்
விடை கிடைக்கும்