Tuesday, July 31, 2012

வீட்டை நேர்த்தியாக வைத்திருக்க சில யோசனைகள்







அழகு என்பது எல்லோருக்கும் விருப்பமானது.அழகாய் இருப்பதனையே இறைவன் விரும்புகிறான்.பல பிரச்சினைக்கு காரணம்  இந்த `அழகு தான்.அழகினாலே பல பிரச்சனைகளை தீர்த்தும் விடலாம்.அழகு என்றவுடன் சற்றென திரும்பி பார்த்து விடுகிறோம்.பாதையில் அழகான பெண் ஒருத்தி போகிறாள் என்றால் பலரும் அவளை கண் வெட்டாமல் பார்ப்பதனை இந்த இடத்தில் உதாரணமாக கொள்ளலாம்.

நாமும் நம் சுற்றுப்புறச்சூழலும் அழகாய் இருக்கும் போது மன நிறைவேட்படுகிறது.இயற்கை காட்சிகளை ரசித்துப் பார்க்கிறோம் ஒரு பூங்காவனத்திற்குள் நுழைந்தாலே புத்துணர்வேட்படுவதனைக் உணரலாம்.சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்கும் அதே வேளை நமது இல்லத்தை நாமே சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பதன் மூலம் அனைவரினதும், கவனத்தை நமது இல்லத்தின் மீது பதியச் செய்யலாம்.
வீட்டை என்னதான் சுத்தமாக வைத்தாலும் ஒரு சில நிமிடங்களில் அலங்கோலமாக காட்சியளிக்கிறதே என பெண்கள் அலுத்துக்கொல்வதும  வேலையாட்கள் அலுத்துக் கொள்வதும் உண்மை தான்.சிறுவர்கள் இல்லாத வீடுகள் நேர்த்தியாக எப்போதுமே காட்சியளிக்கும்.சில வேளைகளில் சிறுவர்களே இல்லாத வீடுகளும் அசுத்தமாக இருக்கின்றன.அது வேறு கதை .வாடகை வீடாச்சே பின் எதற்கு நாம் துப்பரவு செய்து கஷ்டப்பட வேண்டும் என எண்ணுபவர்களும் நம்முள்ளே இருக்கத்தான் செய்றாங்க.வைத்தால் வைத்த இடத்தில் இருப்பதற்கு இது என்ன அருங்காட்சியகமா? என வினவுபவர்களும் நம்முள்ளே இருப்பாங்க.

இனி நாம் ,எவ்வாறு வீட்டை நேர்த்தியாக வைத்துக்கொள்ளலாம் என பார்ப்போம்.

  • சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் வாழும் வீட்டில் குழந்தைகளுக்கென தனியான அறை ஒன்றை ஒதுக்கி அவர்களின் விளையாட்டுப்பொருட்களை அவ் அறையிலே வைத்து விடுவது சிறந்தது.

  • எந்த பொருளாயினும் அது நமதே எனும் பற்று வர வேண்டும்.ஆக,வாடகை வீட்டை நமது சொந்த வீடு என்று தினமும் நினைக்க வேண்டும்.

  • தேவைக்கதிகமான பொருட்களை களஞ்சிய அறையில் வைத்து பூட்டி விடுதல் நன்று.தேவை ஏற்படும் போது எடுத்துக் கொள்ளலாம்.

  • பொருட்களை  எடுக்கும் போது ஏனைய பொருட்கள் குழம்பாத வண்ணம் அவதானத்துடன் நடந்து கொள்ளல் வேண்டும்.

  • வேலையாட்கள் வேளை செய்யும் வீடுகளில் வீட்டிலிருப்போர் மனசாட்சியுடன் வேலைக்காரனும் மனிதனே என்று எண்ண  வேண்டும்.தங்கள் குழந்தைகள் இழுத்துப்போடும் போது பார்த்துக்கொண்டிருக்கும் பெற்றோர் இதனைக் கவனத்தில் கொள்ளுதல் நன்று.

  • சமையலறை,வரவேற்பறை,குளியலறை,படுக்கையறை ,அலுவலக அறை போன்றவற்றின் நிலத்தினை தினமும் சுத்தம் செய்வது நன்று.

  • பெண்கள் மட்டும் தான் சுத்தம் செய்யப்பிறந்தவர்கள் என ஆண்கள் எண்ணாமல் பெண்களுக்கு ஒத்தாசையாக ஆண்களும் இருக்கும் போது அழகிய கனவில்லத்தை தினமும் காணலாம்.

மேற்படி குறிப்புகளில் ஏதாவது ஒன்றை தினமும் பயன்படுத்துவதால் அழகான வீட்டையும் சுமூகமான உறவையும் பெற்றோர -பிள்ளையும் ,கணவன்-மனைவியும் ,முதலாளி-தொழிலாளியும் பேணலாம்.




Friday, July 20, 2012

மன்னாரில் இடம்பெற்று வரும் பிரச்சினை குறித்து

மன்னாரில் இடம்பெற்று வரும் பிரச்சினை குறித்து பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டாலும்  பிரச்சினை என்னவென்று ஆய்வு செய்யப்பட வேண்டும்.மக்களின் பிரச்சினையையை மக்கள் பிரதிநிதி தான் பேசவேண்டும்.அவ்வாறு பேசும் பொது பிரச்சினைக்கு காரணம் அமைச்சரே என கருத்து வெளியிடுவது உண்மைகுப்புரம்பானது.

Thursday, July 5, 2012

மனம் திறந்து .......

சில விடயங்களை  மனம் விட்டுப்பேசி விடலாம்.சில விடயங்களை பேசாமல் அதன் போக்கிலே விட்டு விடலாம்.சிலநேரங்களில் வாதாடலாம்.வாதாடி வெல்ல முடியாத விடயங்களை பேசாமல் இருப்பது தான் நன்று.கொஞ்சம் காலமாக எனது நண்பர் ஒருவர் என்னுடன் பேசுவதில்லை.அதற்கு குறிப்பிட்டு சொல்லுமாறு எந்தக்காரணமும் இல்லை.ஆனால் நாங்கள் பேசிக்கொள்வதில்லை.நான் ஒரு நூல் தான் வெளியிட்டேன்.அப்பாடா................................................................................... ஆயிரம் பிரச்சினை.அந்த நூலுக்கு விமர்சனம் எழுத யாரிடமாவது நான் சொல்ல வேண்டுமாம்.நேர்காணல் கொடுப்பதென்றால் அவர்கள் சொல்லுவதைப்பேச வேண்டுமாம்.என்னைப் பற்றி நானே மற்றவரிடம் சொல்லணுமாம்.ஏனெனில் பொறாமை நிறைந்த இலக்கிய உலகு அடுத்தவரின் திறமையை வெளிச்சம் போட்டுக்காட்டாதாம்.இப்படிப் பல ...........................................
நான் ஒரு நூல் வெளியிட்டதால் அந்த நண்பருடன் பிரச்சினை வரும் என்று தெரிந்திருந்தால் நூலை pitpottirukkalaam .ஆனால் தெரியவில்லை.

இங்கு அதிசயம் என்ன வென்றால் நண்பர் சொன்னதற்கு மாற்றமாக எல்லாம் நடந்தது.அனைத்து ஊடகங்களும் என் நூல் வெளியீட்டு விழா பற்றி செய்திகள் வெளியிட்டன.இது பற்றிய அவர்  கருத்தானது பெண் என்றால் அமெரிக்க ஜனாதிபதியும் செய்தி போடுவார் என்பது.பின்னர் விளையாட்டுக்காக போடப்பட்ட பின்னூட்டம் எங்கள் நட்பை இன்னும் விரிசலாக்கியது.இது வரை அந்த நண்பர் தொடர்பேட்படுத்த வில்லை.ஓன்று மட்டும் உண்மை சரி, பிழை தெரியப்படும் .அப்போது பிழை சரியாகவும் சரி பிழையாகவும் மாறிவிடாது............

நல்ல நட்பை விடுவது என்றால் கொஞ்சம் என்ன அதிகமாகவே கஷ்டம் தான்.அதற்காக கொள்கைகளை மாற்றிக்கொள்ளவோ புப்ளிசிட்டி பைத்தியமாக அலையவோ முடியாது.

ஷாமிலா ஷெரிப்