
அனைத்துமே
இருளாகத்தான் இருக்கின்றன
கூடவே
மனித மனங்களும்
தொலைத்துவிட்ட
சந்தோசங்களை
ஒரே விடியலில்
பார்க்கிறேன்.........
கண்டவை
கனவு என்று
விடியும் வரை
தெரியாது ...
விடியலின்
மகிழ்ச்சியில்
சிந்திக்கிறேன் ...
முடியும் வரை
தெரியாது
வாழ்வது எப்படி என்று ?
முடிவில்
ஓர் ஆரம்பம் ....
பல தனி மரங்கள் தான்
தோப்பானது....
இந்த தொடர்ச்சி-அழகிய
விடியலை நோக்கி ....