Saturday, March 11, 2017

கவிதை எழுத்து

பெண்ணுட லையும் மூடியிருக்கும்  முலைகளையும் யோனியையும் அதன்
உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துதல் கவிதை வியாபாரம் எனில்
கடையை சீல் வைத்து மூடவே விரும்புகிறேன்

பாவம் அவர்கள் பேசப்படவேண்டியவர்கள்
என்னையும் என்னாடையையும் விமர்சிப்பவர்களுக்கு
நான்
ஒருபாட்டுடையாள்
கம்பனும் ஒரே ஒரு பாடலில் தான் சத்துருக்கனை பாடினான்
ஆயிரம் பாடல்களில் பாடப்பட்ட இராவணனை மாற்றுக்கருத்துடையோர் கொண்டாடுவதை தவிர்க்வியலாது
கவிதை உலகிற்கு மறைத்தலே சிறந்தது

மௌனத்தை கலைத்து
விரதத்தை உடைத்து
சமயத்தை அடகுவைத்து
சாக்கடைகளை எழுத்தில் கொண்டுவரவேண்டிய தேவையை ஒருக்காலும் உணரப்போவதில்லை
ஒழுக்கமற்ற எழுத்துக்களை யார்தான் விருப்போகின்றனர்?விரும்புபவர் குறித்தும் கவலையில்லை
மருந்து குடித்தால் குணமாகிடும் வருத்தமல்லவே எழுத்து.

No comments:

Post a Comment