Sunday, August 6, 2017

தவற விட்ட உரையும் 47வது இலக்கிய சந்திப்பும் (மலையகம்)


சென்ற முறை கிழக்கில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது என்று முஸ்டீன் அங்கலாய்த்துக்கொண்டிருந்த போது மீண்டும் இலங்கையில் நடக்குமாயின் கட்டாயம் கலந்து கொள்ளனும் என்றார்.மலையக இலக்கிய சந்திப்பு நடைபெற போவது குறித்து முகநூலினூடே அறியக்கிடைத்தது.

பெண்ணிய அரங்கில் பேசுகின்றீர்களா என லறீனா ராத்தா கேட்டதற்கிணங்க நானும் முன்னாள் போராளிப் பெண்களின் படைப்பிலக்கியங்கள் குறித்து பேசலாம் என்றேன். ஒரு வாரத்தின் பின்னர் திலகர் அண்ணா தலைப்பு தொடர்பில் உறுதிப்படுத்திக்கொண்டார். ஆய்வுக்கட்டுரையின் Soft Copy தேவைப்படுமா? கோவையாக போடும்P எண்ணம் உள்ளதா என்பதனை தெரிந்து கொள்ள லறீனா ராத்தாவை தொடர்பு கொள்ள முடியாமல் போகவே லுனுகல சிறியிடம் கேட்ட போது இல்லை என்பதை குறிப்பிட்டார்.

சர்மிளா ஷெய்த்திடம்  தொலைபேசியில்  இலக்கிய சந்திப்புக்கு வருவியா என கேட்ட போது ஏற்கனவே அதற்குள் பிரச்சினையாம் இதில நான் எங்க போறது என்று குறிப்பிட்டார்.அப்போது தான் கத்னா உரையினால் உண்டான  இலக்கிய சந்திப்பு உட்பூசல் தெரிய வந்தது.ஆனால் லறீனா ராத்தா எதுவுமே தெரியாதவர் போன்று கடைசி வரை இருந்துவிட்டார்.இது குறித்து விசாரித்த போதும்  சரி ஆரம்பத்தில் அரங்குகள் குறித்து கேட்ட போதிலும் சரி எதுவுமே கூறவில்லை.அது அவரின் குழுஒருமைப்பாட்டினைக் காட்டுகின்றது என்றே நினைக்கிறேன்.வெளியேற்றம் குறித்து கேட்ட போதும் அப்படி எதுவும் நடக்காத மாதிரி சமாளித்து விட்டார்.ஒருவேலை நான் கலந்து கொள்ளாமல் விட்டுவிடுவேனோ என்று மறைத்தாரோ தெரியவில்லை.இது இவ்வாறிருக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான தயார்படுத்தல்களை ஒரு மாதத்திற்கு முன்பே  செய்து விட்டிருந்தேன் புகையிரத பயணச்சீட்டிற்கான வரன்ட் எடுத்து லுனுகல ஸ்ரீயின் மகளுக்கு கிப்Ft வாங்கி வைத்து உரைக்கு தேவையான நூல்களினை வெற்றிச்செல்வி,மிதயா கானவி ஆகியோரிடம் அனுப்ப சொல்லியும் சில நூல்களினை ஹேமச்சந்திர பத்திரன அவர்களிடமிருந்தும் பெற்று தொடர்ச்சி யான வாசிப்பில் மூழ்கியிருந்தேன்.

முகநூல் தொடர்பு குறைவு என்பதனால் பனிப்போர், சூறாவளி, காட்டுத்தீ போன்றவை என்னை தீண்டுவதில்லை..நிகழ்ச்சியிற்கு முந்திய தினம் கணவர் ,குழந்தையுடன் வருவேன் தங்குமிடம் தேவை என்பதனை திலகர் அண்ணாவிடம் தெரிவித்திருந்தேன்.ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால்  குறிப்பிட்ட தினத்தில் என்னை அழைத்துச் செல்ல முஸ்டீன் வரவில்லை.இருந்த போதும் இறுதி நேரம் வரை ஆயத்தமாகவே இருந்தேன்.கொழும்பிலிருந்து செல்பவர்களுடன் சேர்ந்து செல்லலாம் ஆனால் என் சின்ன வான்டா தனியாய் சமாளிக்க முடியாது என்பதனால் முஸ்டீன் வந்து அழைத்துச்செல்லும் வரை காத்திருந்தேன்.இருந்தும் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போனமை முஸ்டீன் மீது ஆத்திரத்தினை உண்டு பண்ணி ஊடலில் முடிந்தது.காரணம் வெற்றிச் செல்வி பல சிரமத்திற்கு மத்தியிலும் தன்னுடைய அத்தனை நூல்களையும் யாழிலிருந்து கொழும்பு வரும் பேரூந்தில் அனுப்பி வைத்திருந்தமையும் ஏனைய கற்றல் விடயங்களை தவிர்த்து தொடர்ச்சியான வாசிப்பிலிருந்தமையினாலுமாகும்.

முஸ்லிம் உறுப்பினர்களின் கதைகளை கேட்டு நான் பங்கு பெறவில்லை என பேச்சடிபட்டதாக அறிந்தேன்.அந்த முஸ்லிம் உறுப்பினர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த காக்கா தம்பிமார் மூன்று பேருடனோ றியாஸ் குரானாவுடனோ குறைந்தது முகநூல் தொடர்பேனும் எங்களுக்கில்லை.மிகுதி ஒரே ஆள் லறீனா. இலக்கிய சந்திப்பு தொடர்பான முதல்  கலந்துரையாடல் அவருடைய இல்லத்தில் நடை பெறுவதற்கு முந்திய தினம் என்னுடைய வீட்டிலிருந்தே அவசரஅவசரமாக புறப்பட்டுச் சென்றார்.எதிர்பார்த்திராத விதமாக நோன்பு தலைப்பிறை தென்பட்டதனால் நான் போகவேண்டாம் என தடுத்தும் இல்லை நாளை சமைக்க வேனும் நான் போகவே வேண்டும் என பிடிவாதமாக சென்றார்.இங்கு முக்கியமான விடயம் என்னவெனில் என்னையோ அல்லது நிகழ்வில் பங்குகொள்ள இருந்த யாரையும் போக  வேண்டாம் என்று சொல்லுமளவு லறீனா அற்பத்தனமானவரும் அல்ல பிழையான அறிவுறுத்தல்களை தொடருமளவுக்கு நாங்களுமில்ல.இறைவன் அந்த உரையினை நாடவில்லை என்றே நான் நினைக்கிறேன்.,

இவை எல்லாவ ற்றையும் தான்டி நேற்று குழும மின்னஞ்சல்களை பார்க்க நேரிட்டது அதில் பெண்ணிய அரங்கில் நான் கலந்து கொள்வதனால் எபியெம் இத்ரீசுக்கு அசௌகரியம் இருப்பதாகவும் அதனால் அவ்வரங்கில் இருந்து அவரின் பெயரை நீக்கி விடும்படி இத்ரீசின் தம்பி இம்தாத் பண்ணிய மெய்லைப் படிக்கக் கிடைத்தது. "அவ்வரங்கில் நான் தன்னினச் சேர்க்கையாளர்கள் குறித்தோ அல்லது அமெரிக்க உலக யூதர் ஒன்றியத்தின் நிதியுதவியில் இயங்கும் ஈக்குவல் கிரவுன்டின் வளவாளர்கள் குறித்தோ அல்லது ஜாமியா நளீமியாவின் விரிவுரையாளர் தரத்திலிருந்து அவரை நீக்குவதற்கு நளீமிய நிருவாகம் எடுத்த முன்னெடுப்புகள் குறித்தோ நான் பேச இருக்கவில்லையே.."முன்னாள் போராளிப் பெண்களின் படைப்பிலக்கியங்களில் மேலோங்கியிருக்கும் பெண்ணியக்கருத்துக்க ள்" பற்றி தானே பேச இருந்தன் பின்னர் ஏன் அவருக்கு சங்கடம் ஏற்பட வேண்டும்? அவருக்கு நிகழ்வில் பங்கு கொள்ள வேறு காரணம் சொல்ல முடியாததற்கு இவ்வாறு சொன்னதாகவும் பூசி மெழுகப்பட்டது.பெண்களுக்கான (தாய்,சகோதரி) உரிமைகள் மறுக்கப்பட்ட வீட்டிலிருந்து ஓர் ஆண் பெண்ணியம் பேச எத்தனிக்கின்ற போது அவ்வரங்கில் பேச எனக்குத்தான் அவமானம்.

வேணாம் வாயக்கிளற. 

இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
நன்றி
வணக்கம்.