வெட்ட வெட்ட தான் காதல் தழைப்பதும் மரம் தழைப்பதும்.ஒரு விடயத்தை செய்கிறோம் செய்வோம் என வாக்களித்து விட்ட பின்னர் அவ்விடயத்தினை செய்ய முடியாமல் போகும் சந்தர்ப்பங்களும் உண்டு. இலக்கியவாதி சில நேரங்களில் அரசியல் வாதியாக நேரிடுகிறது.
" வீரன் ஒரு முறை தான் இறக்கிறான்.பயங்காளி நூறுமுறை சாகிறான்.என்று சொல்லி சீசர் சிரிப்பார். சீசரைக்கொல்வது புண்ணியம் என்று போதிக்கப்படுகிறது.புரூட்டஸ் ஒரு 'கோட்செயாக'மாறுகிறான். புரூட்டசின் கத்தி சீசரின் இதயத்தைப் பிளந்தது.சீசரின் ஆத்மா "புரூட்டஸ் நீயுமா?" என்று சொல்லிக்கொண்டு வானத்தைக்கிழித்தது
இங்கும் ஒரு இலக்கியவாதியும் அரசியல் வாதியும் ப்ரூட்டஸ் ஆக நேரிடுகிறது. கசியஸ் கூட்டத்தினர் ப்ரூட்டசை ஏமாற்றியது போல்
இங்கும் ஒரு கூட்டத்தினர் இலக்கியவாதியையும் அரசியல்வாதியையும் ஏமாற்றுகின்றனர்
அன்ரனி புரூட்டசைப்பற்றி நன்கறிவான்.புரூட்டஸ் ஏமாந்துதான் இதனைச் செய்தான் என்று அன்ரனிக்கு தெரியும் அன்ரனி தான் வாய்வீரத்தை புரூட்டசின் ஏமாற்றத்தை அவனுக்கே எடுத்துக்காட்டுவதில்செலவு செய்திருப்பானேயானால் எந்தக்கத்தி சீசரின் இதயத்தை பிளந்ததோ அந்தக்கத்தி கசியஸ் கூட்டத்தை சங்காரஞ் செய்திருக்கும்.அந்த வஞ்சகன் அன்டனி அப்படி செய்யவில்லை.
இங்கும் ஒரு அன்டனி ஏமாற்றியிருக்கிறான். "நீதி ஆபத்துக்குதவாது.லௌகீக தந்திரந்தான் ஆபத்சகாயன் என்றன் மேலைநாட்டுப் புலவன்.ஒரு படைப்பாளியின் ஆற்றலை எந்தக் காசியஸ் கூட்டத்தாலோ அன்டநியாலோ ஒன்றும் பண்ண முடியாது.தூரத்தில் இருந்து வேடிக்கை தான் பார்க்க முடியும் மதத்தின் பெயரால் ஊரை நாசமாக்கும் ஆசாமிகள் இலக்கிய வாதியின் ஒரு தலை முடியைஎனும் பிடுங்க முடியாது.
படைப்பாளி என்பவன் உள்ளத்திலிருந்து பேசுவான்.மௌனப்போரும் புன்னகை ஆயுதமும் வெளியிட்ட முஸ்டீன் உம் அதைத்தான்செய்திருக்கிறான்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete