Thursday, December 29, 2011

கவிஞர் ரஹீமாவிடமிருந்து

உள்ளத்துள்ளது கவிதை .உணர்ச்சி ஊற்றெடுப்து கவிதை .தெள்ளத்தெளிவது  கவிதை.தெரிந்த ஞானம் உரைப்பது கவிதை .இப்படி எவ்வளவோ கவிதைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் .

எழுத்துப் பணிக்கு நிறைவேது ?ஆயுள் உள்ள மட்டும் அது தொடரும் எழுதவும் எழுத்தை படிக்கவும் அதன் கருத்தைச் சுவைக்கவும் காலம் வாய்க்க வேண்டும் .
மனிதர்களின் சோம்பலை வளர்க்கவென்றே ஊடகங்கள் பல்கிப் பெருகி விட்ட நிலையில் லங்காபுரியிலிருந்து துடிப்புடன் ஒரு யுவதியின் குரல் வான உயரத்தில் நிலவின் கீறல்களாய் இறங்கி நம் மனதில் தைக்கிறது .சின்னச் சின்ன  வார்த்தைகளில் பெரிய பெரிய விடயங்களைத்துளிப்பாக்கி இருக்கிறார்
கோபம் ,எள்ளல்,இளிவரல் கவிகள் முழுவதும் விரவிக் கிடக்க தேசத்தை அவர் பார்வையில் விமர்சனம் செய்கிறார். மனிதர்களின் சாடல் ஏக்கமும் எதிர்பார்ப்புமாக  ...நண்பனுக்கு என்ற துளிப்பாக்களில்,
துளியளவும் ரசனை
 இல்லாத உனக்கு
 என்   கவிதைகள்
உனது மொழியில்
செல்லாக்காசு .......என்று ஆரம்பிக்கும் போதே அவன் நண்பனா எதிரியா என்று புரிகிறது .லண்டன் மாப்பிள்ளை ஏதோ மகிழ்ச்சியில் பூத்தது என்று எண்ணினால் ஏமாற்றம் தான் .வாழைப்பழத்தில் ஏற்றிய ஊசிகளாய் கவி வரிகள் இலங்கைத்தமிழுடன் ஆங்கில ஆளுமையும் கொஞ்சம் அத்து மீறல்
படக்காட்சிகளாய் நிகழ்ச்சியின் விரிவாக்கம் நூல் முழுவதும் விரவிக்கிடக்க கோபமும் ஒரு படி மேலோங்கி கனலான கவிதைகள் .எனக்குள் எழும் கேள்விகளை யாரிடம் போய்க் கேட்பது என்பதே பெரிய கேள்வியாகி ... எனக்குள் எழும் கேள்விகள் கவிதைத் தெறிப்பு .

Saturday, December 17, 2011

உன்னுடனான எனது பகிர்வுகள்

இத்தனை நாட்கள்
உன் -
தொடர்பின்றியே கழிகிறது
உன்னை எங்கு
தேடுவது ????????????
நீ
எங்கிருப்பாய் என்று
ஊகித்து -
தோற்றுப்போகிறேன்
தொடர்பில்
இருந்த நாட்களை விட
உன்னை அதிகம்
நேசிக்கிறே..........

என்னை இப்படி
அலைய விடுவது
எந்த வகையில்
நியாயம் ?

ஒரு வார்த்தை
குறுந்தகவல்
அனுப்பினால்
உன்
வங்கி மீதி
குறைந்து விடுமா ??

தெருவில் உள்ள
 பிச்சைகரர்களுக்கு போடும்
அந்த
மனது கூட
உனக்கு இல்லாமல்
போனதென்ன ?

பயணம்

எத்தனை பயணங்கள்
மறந்தது
மறக்க முடியாதது என
தொடரும்
பயணமாய் ........

பயணத்தில் சந்திக்கும்
சிநேகங்கள்
தொடர்வதும்
துண்டிப்பதும்
பயணத்தினைப்  பொறுத்ததே .....

எல்லாப் பயணங்களும்
இனிதாய் அமைய
வேண்டும் என்றே
பிராத்திக்கிறோம் ......

தற்காலிக பயணத்திற்காய்
துடிக்கும் எவரும்
நிரந்திரப் பயணம்
பற்றி
சிந்திப்பதில்லையே
 ஏன்?


Sunday, December 11, 2011

காலத்தை வென்றது எது ?







கலை இலக்கியம் என்ற தோரணையில் தொடர்ச்சியான குறை குடங்களை பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்கிறோம் .எனது நண்பர் ஒருவர் குறிப்பிட்டார் ,நான் வெளியிட இருக்கும் இந்நூல் பதினோராவது என்றார் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .எனக்கு தெரியாதே என்ற போது அது தான் ,நான் என அவர் பெயரைச் சொன்னார் .
இங்கு முக்கியமான விடயம் என்ன வென்றால் இலை மறை காய்கள்,நிறை குடங்கள் இப்படி பலவற்றைக்கானலாம்.முட்டை இட்டு விட்டு கொக்கரிக்கும் பெட்டைக் கோழிகள் காலத்தை வென்றனவா என சிந்திக்கின்ற போது விடை முட்டைதான் .

நண்பா நீ காலத்தை வெல்வாய்...கூடவே உனது படைப்புக்களும் வெல்லும் .

Tuesday, December 6, 2011

நட்பு
















சாதனை செய்தால்
தான்
கின்னஸ் என்றால்
எங்கள்
நட்பு -
சாதனை படைக்காத
ஒஸ்கார் விருது ..........

Wednesday, November 30, 2011

முஸ்லிம் பெண்களும் காதிநீதி மன்றங்களும்

முஸ்லிம் பெண்கள் உலகில் எவ்வளவோ முன்னேறி இருந்த போதிலும் இலங்கையில் அவர்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது .மன வாழ்வு கசந்து போய் இனி வாழ முடியாது என்று கருதுகிற பட்சத்திலே காதி நீதி மன்றம் நோக்கி செல்கிறாள் .இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால் இலங்கையில் காதி என்பவர் யார் ?அவருக்குரிய அலுவலகம் எது ?காதிக்குரிய தகைமைகள் என்ன ?காதி எவ்வாறான கேள்விகளை கேட்க வேண்டும் ?என்ற விடயம் எல்லாம் எழுதப்படாத சட்டமாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும் .

ஒருவருக்கு ஓய்வூதியம் கொடுப்பதன் நோக்கம் அவர் ஓய்வாக இருக்க வேண்டும் என்பது தான்.ஆனால் இங்கு ஓய்வு பெற்றவரே சில சமயங்களில் காதி நீதவானாக இருக்கின்றார் .இல்லாவிடில் ஊரில் பெரியவரோ மார்க்க பெரியார் ஒருவரோ நியமிக்கப்பட்டுள்ளார் .இரண்டு உள்ளங்களுக்கிடையில் தீர்ப்பை வழங்குபவருக்கு இருக்க வேண்டிய தகைமை என்ன என்பது பற்றி எங்கும் குறிப்பிடவில்லை .

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆரோக்கியமான  கலந்துரையாடல் ஒன்று சென்ற வாரம் கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம் பெற்றது .   

Sunday, November 20, 2011

நண்பனுக்கு

துளியளவும் ரசனை
இல்லாத உனக்கு
என் கவிதைகள்
உனது மொழியில்
செல்லாக்காசு ........

நண்பா
இலக்கியம் படைப்பதில்
உள்ள ஆத்ம
திருப்தி -ஓயாது
உழைக்கும் உன்னிடம்
இருக்காது....

ஒரு கவிதை
எழுதிப் பாரேன்
உனக்குள்ளும் ஏதாவது
பிறக்கும்...
அது எதுவாக இருப்பினும் ........


Friday, November 18, 2011

லண்டன் மாப்பிள்ளை






போ(f)ரின் போக முன்
பேசிவைத்த
பாரீதா ராத்தாட மகள்
பாத்தும்மாவை மறந்துவிட்டது
தம்பிக்கு .

இங்கிருந்து -
இங்கிலாந்து சென்றபின்
நினைவில் வந்ததெல்லாம்
வேர்ல்ஸ் இளவரசி
டயானா தான்!

எட்டாம் வகுப்பு வரை
படித்து விட்டு சென்றவர்களின்
எக்ஸ்ட்ரா கோளிபிசென்
இங்கிலிஸ் ஒன்றுதான்

இவர்களின்
கனவு நாயகிகள்
சிட்டியில் உலாவும்
சிட்டுகள் தான்
அவர்களால் தான்
சிட்டிசன்சிப் .
இருந்தும் ....
கலாசாரம் பேண
பெண் தேவை
அதுவும் நுனி நாக்கில்
இங்கிலிஸ் .......

மாப்பிள்ளைக்கு பெண் தேடி
ஈற்றில்
டொப் டென் போடோஸ்
அனுப்பிவைக்கப்படும்
அதில் -
ஒரு மோர்டன் கேளை
செலக் பண்ணுவார் தம்பி
வீட்டு வேலைக்கு

பெண்ணும் தனது
அடிமை வாழ்வு தெரியாது
கனவுகளுடன்
பறந்து செல்வாள்

ஊரில்
பெரிதாய் பேசப்படும்
மகளுக்கு
லண்டன் மாப்பிள்ளை 
  

Monday, November 14, 2011

ஞானம் சஞ்சிகை பார்த்து

காயல் பட்டன கசமுசாக்கள் பற்றி அடிக்கடி எல்லா சஞ்சிகைகளிலும் பார்த்து புளித்துப் போன நிலையில்  சென்ற வாரம் வெளிவந்த ஞானம் சஞ்சிகை பார்த்து சிரித்து விட்டேன் .கடைசிப்பக்கத்தில் என்ன குறிப்பிட்டிருக்கிறார்கள் என சற்று வாசித்து பார்த்தால் சில முஸ்லிம் இலக்கிய வாதிகளின் நிலைப்பாடு புரியும் .
எந்த விசயத்தையும் கதைப்பது இலகு .செய்வது கடினம் .அதே நேரம் சில விடயங்களை செய்வதற்கு ஆளுமை முக்கியம் .சில நேரம்  ஆளுமை குறையுமிடத்து இலக்கிய வாதி என்றால் அதிகம் விமர்சனத்திற்கு ஆளாவான்.இது தான் எங்கும் நடப்பது. அது தான் இங்கு நடந்தது .(காயல் பட்டன மாநாடு )

Tuesday, November 8, 2011

அரசியல்

பாடம் படிப்பதற்கு 
மட்டும் பிடித்திருகிறது
எனக்கு ;
ஆனால் சிலருக்கோ  
வாழ்வில் 
அநேகமான பாடங்களைக் 
கற்றுக்கொடுக்கிறது.

Friday, November 4, 2011

எனக்குள் எழும் கேள்விகள்







தினமும் எனக்குள்
பல கேள்விகள் 
எழுந்து கொண்டே 
இருக்கின்றன ......

யாரிடம் கேட்பது ?
என்பது ஒரு 
கேள்வி ..............
கேட்டால் என்ன 
நினைப்பார்களோ 
என்பது மற்றொரு 
கேள்வி .............

ஏன் இவர்கள் 
இப்படி என்றொரு கேள்வி 
நாங்கள் எப்படி இருந்தால் 
உங்களுக்கென்ன 
இன்னுமொரு கேள்வி .......

மனிதர்களா  இவர்கள் 
இது எல்லோரின் 
கேள்வி .........
எவ்வளவு காலம் 
நீடிக்கும் என்பது 
தினம் ஒரு 
கேள்வி .......

இதுவா சர்வதிகாரம் 
என்பது எனது  
கேள்வி ........
ஜனநாயகத்துக்கு 
வரைவிலக்கணம் என்ன ?
இது மக்களின் 
கேள்வி ..........

கேள்வி கேட்டா 
அடி விழுமா ?
இது மாணவர்களின் 
கேள்வி .......................??????

Tuesday, October 25, 2011

மச்சானுக்கோர் மனு


மச்சான் ,
உனக்கான என்னை 
தினமும் தயார் படுத்துகிறேன் ................
இருந்தும்..

மரத்தில் இருந்து 
விழுந்த பழத்தை 
கொத்தி பார்க்க 
நினைக்கும் காக்கைகள் 
கூட்டம் .................

ஆடு நனைதுன்னு 
அழும் ஓநாய்கள் 
கூட்டம் ..................

தானாக வந்து 
முட்டும்-எருமைகள் 
கூட்டம் ..........

பாசம் காட்டுவது போல் 
வேஷம் போடும் 
பச்சோந்திகள் 
கூட்டம் ...............

இப்படி ஒரு 
மிருககாட்சி சாலையில் 
தினமும் பயணிப்பது
சவாலாகி விட்டது ....

இந்த மனு 
உன் மேலான
 கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது .!

Monday, October 24, 2011

மௌனியாய் பயணிக்கிறேன்








இது வரை 
என் வாய்க்கு 
இப்படி ஒரு 
தாழ்ப்பாள் இட்டதில்லை நான் 
உன் பிரிவு 
எனை -
முழுமையாய் கட்டியாள்கிறது
எதை விடுவது 
எதை தொடுவது 
இல்லை -எதை 
விட்டு ஒதுங்குவது 
எதனையும்  கற்றுத்தரவில்லை நீ 
அதனால் நான் 
மௌனியாய் பயணிக்கிறேன் .......................
இப்போது எனக்குத் 
தெரிந்தது எல்லாம் 
தனித்திருந்து உன்னை நினைப்பது தான் 

Saturday, October 22, 2011

என் மச்சான் கட்டிய கூடு





என்
காதல் மாளிகையில் 
நீ -
கூடு கட்டி வசித்தாய்
நானாக ஒரு போதும் 
கலைக்க   நினைக்கவில்லை 
காலன் யாரைத்தான் 
விட்டு வைத்தான் ??
மச்சான் 
நீ -கட்டியஅந்தக் கூடு
இன்னும்........
அப்படியே ......




Thursday, October 20, 2011

கடாபி கைது

செய்து அறிந்தவுடன் சிந்திக்கலானேன் .மக்கள் விரும்பும் தலைவனாய் நடக்கத்தவறிய எத்தனை தலைகளை பார்த்து விட்டோம் .இன்னும் இது புரியாமல் பல தலைகள் ............................
கேர்னல் இறந்து விட்டதாகவும் நம்ப முடியாத செய்திகள் காலம் எத்தனை வேகமானது .சில விடயங்களை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டி இருக்கிறது 

Revolutionary Daughters - Activate - Al Jazeera English

Revolutionary Daughters - Activate - Al Jazeera English

Monday, October 17, 2011

எனக்குள் நீயான பின்னர்




எனக்குள் நீயும் 
உனக்குள் நானும் 
ஆயிரம் கற்பனைகளுடன் 
கரம் பிடித்த 
அந்த நாள் ........ 

கருமேகங்களை உள்வாங்கிய 
வானமாய் காதல்மழை 
பொழியும் 
நீ .................
அதில் முழுமையாக 
நனைய நினைத்த 
நான் ..............

இன்று 
இலக்கியத்தில் நாணம் 
தடுத்தாலும் 
இங்கு -
அரசியல் அச்சுறுத்துகிறது .




Friday, October 14, 2011

இரண்டு கவிதைகள் பற்றி

உனது வாழ்வு 
ஒரு கவிதை 
எனது வாழ்வு 
ஒரு கவிதை 
உனது கவிதையின் 
அர்த்தம் என்னால் 
புரிந்து கொல்லப்பட்டது 
அதன் உள்ளடக்கமும் 
கருத்தாழமும் 
கூடவே இலக்கண பிழைகளும் 
மிகத் தெளிவாகவே 
உள்வாங்கிக்கப்பட்டது. 
உனது கவிதையில் 
எனக்காக -நீ 
விட்டிருந்த 
இடைவெளிகளை நிரப்ப 
பொருத்தமான 
வார்த்தைகளுக்காய் நானும் 
என் கவிதையும் ...............................

Sunday, October 9, 2011

திருத்தம்



திருத்தலாம் என 
எடுத்து வந்தேன் 
கொண்டு வந்த பின்னர் 
தான் தெரிந்தது 
எல்லாம் திருத்தப்பட்டவை என்று 
அப்போது தான்
உணர்ந்தேன் 
இன்னும்  திருத்தப்பட வேண்டியது 
நான்  மட்டும் என்று 

பிரிவு



சங்க காலம் 
படிக்கையில் புரியவில்லை
பிரிதல் ஒழுக்கம்
நீ-
எனைப் பிரிந்த போது
அன்பினைந்தினையும் 
கற்றுக்கொண்டேன்

Thursday, September 29, 2011

இலக்கியம்

இடிபாடுகளுக்குள் சிக்குண்ட
கண்ணாடி போத்தலாய்
இன்று ...........

குத்திக் கிழித்து
காயப்படுத்த
நினைக்கும் பல மாடிக்கட்டடங்கள் ..............

இலக்கிய 
இருதயம் நொறுங்குண்டு விட்டது

நிலவின் பகிர்வுகள்: தொலைத்ததை தேடல்

நிலவின் பகிர்வுகள்: தொலைத்ததை தேடல்: எங்கு தேடினும் கிடைக்கவில்லை தொலைத்ததாகவும் நினைவில்லை எங்கேனும் எப்படியாயினும்... தொலைக்கவில்லை நன்றாக நினைவிருக்கிறது தொலைந்து போன...

Wednesday, September 28, 2011

தொலைத்ததை தேடல்

எங்கு தேடினும்
கிடைக்கவில்லை
தொலைத்ததாகவும்  நினைவில்லை
எங்கேனும்
எப்படியாயினும்...
தொலைக்கவில்லை
நன்றாக நினைவிருக்கிறது
தொலைந்து போனது
நான் மட்டும் என்று .

ராட்டினம்

சுற்றிச் சுழன்றிடும்
மனித வாழ்வும்
மறைந்திடும் மாயைகளும்
தாவித் திரியும்
வதந்தியும் ஒன்றுதான்
ராட்டினம் சுற்றவிட்டால் தான் என்ன ?

இலக்கியப்பகிர்வு

இலக்கியம் தொடர்பான காத்திரமான கலந்துரையாடல் தேவைப்படுகிறது. இலக்கியவாதிகள் பலர் தம் உள்ளக்குமுறலை வலைத்தளங்களில் வெளிப்படுத்தி இருப்பதை காணலாம் .சங்கப் புலவர்களிடம் காணப்பட்ட மன நிலையே பலரிடம் உள்ளது.என்னிடம் சிறந்த,தன்னடக்கமுள்ள பல இலக்கிய வாதிகள் கேட்கும் கேள்வி "ஏன் நீங்கள் உங்களை அடையாளப்படுத்துவதில்லை ?"

இந்த இடத்தில் எனக்கு நினைவு வருவது ,ஒருமுறை குலோத்துங்க சோழனிடம் சென்ற குமாரப்புலவரும் அவரிடம் மாட்டிக்கொண்டு தவித்த சேவகனும் தான்.குமாரப்புலவனைப்போல் தமது பெருமை பாடும் இலக்கியவாதிகள் பலர் இங்கு. அதனால் அரங்குகளில்  கூட பங்கு பெற நினைப்பதில்லை .நான் மதிக்கும் புலவர் ஜின்னா சரிபுத்தீன் என்னிடம் சொன்னார் "எதற்கு நீ புனைப்பெயரில் எழுத வேண்டும் ம்மா உன் பெயரிலே எழுது என்றார்." அதற்கு காரணமும் சொன்னார் .அவர்கள் சொல்வது உண்மை தான் ஆனாலும் நான் அவரிடம் குமாரப்புலவர் பற்றி சொல்லவில்லை .காயல் பட்டின மாநாட்டிற்கு பிறகு தான் பல விடயங்களை அறியக்கிடைத்தது எனக்கு .

யார் எழுத்தாளன் ?




கையில் பேனை 
எடுத்தவரெல்லாம்  எழுத்தாளனா?
இல்லை -
கண்டதையெல்லாம் -எழுதித் 
தள்ளுபவன் எழுத்தாளனா ?

அலுவலகத்தில்
இலிகிதர் வேலை பார்ப்பவன்
எழுத்தாளனா?
அல்லது 
ஆவலில் இலக்கியம் படைக்க 
எழுதுபவன் எழுத்தாளனா?

சாதனை படைக்க
வேண்டும் என்று எழுதுபவன் 
எழுத்தாளனா?
சோதனையில்-
வேதனையை வெளிப்படுத்த
எழுதுபவன் எழுத்தாளனா? 

தன்னை 
அறிமுகபடுத்த எழுதுபவன்
எழுத்தாளனா?
எழுதியதனால்
முகவரியையே தொலைத்தவன்
எழுத்தாளனா ?

எழுதி எழுதி
தனக்கென இடத்தை
பிடித்தவன் எழுத்தாளனா?
பார்த்து பார்த்து
எழுதி -
பரிசு பெற்றவன் எழுத்தாளனா?

எழுதியதற்கு
அடையாளமாய் நூலொன்றை
உருப்பெறவைத்தவன் எழுத்தாளனா?
அந்நூலினை
விற்பதட்காய் அலைந்தவன்
எழுத்தாளனா ?

எழுத்தாளனுக்காய்
இரங்கற்பா எழுத
யாருமில்லை
 நீயும்
எழுதிப்பார் புரியும்
யார் எழுத்தாளனென்று !


குறிப்பு :இலங்கையில் எழுதாட்டியும் சாகித்திய பரிசு கிடைக்கும்

Tuesday, September 27, 2011

உன் நினைவும் என் தரிசனமும்




என்னில் நிறைந்துவிட்ட 
உன் -நினைவுகளை 
காற்றில் கலந்துவிட்ட 
வாசமாய் 
என் உள்ளம்
சுவாசித்துக்கொண்டிருக்கும் 

உன் சர்வாதிகார 
முறைப்புக்கூட
சோஷலிச புன்னகையை 
நினைவூட்டிக்கொண்டிருக்கும்

உன் வருடல்கள் 
வாழ்வின் 
இறுதிக்கிரியைகளாய்
உலா வந்து கொண்டிருக்கும் 

உன்னால் உண்டான 
காயங்கள் 
ஹிரோஷிமாவை தாக்கிய 
அணுகுண்டாய்
என் இதயத்தில் 
என்றும் வலித்துக்கொண்டிருக்கும் 

சாம்பலாகிப்போன 
உன் நினைவுகளில் 
என் தரிசனம் 
எரித்தாலும் 
மீளெழும் பீனிக்ஸ் பறவையாய்
சிறகடித்துக்கொண்டிருக்கும்  

Monday, September 26, 2011

காட்டான் எனும் நாட்டான்




நகரத்துச் சிலருக்கு 
நாகரிகமாய் உரைக்கவும்
நக்கலாய் அழைக்கவும் 
ஒருவன் -அவன்
காட்டான் எனும் நாட்டான் 


விஞ்ஞானம் படித்து -நகருக்கு  
மெய்ஞ்ஞானம் போதிக்க வந்தவன்
நாட்டான்
வருத்தமெனின் தன் கருமத்தையும் பாராது 
மருத்துவம் பார்ப்பவன் 
நாட்டான்

கட்டிடம் குட்டிச் சுவராகமுன்
அதனை மட்டிட்டவன் 
நாட்டான் 
பட்டணத்தில் பெட்டிக்கடை வைத்து 
காசை கொட்டிக் கொண்டவர்களை
தட்டிக் கேட்காதவன்
நாட்டான்

பாடம் புகட்ட வந்து
பாடம் கற்றுக்கொண்டவன்
நாட்டான்
ஏற்ற இரக்கமின்றி
மாற்றங்களை ஏற்றுக்கொண்டவன் 
நாட்டான் 


வோட்டுக்களை வென்று 
நாட்டுக்கு சேவை செய்பவன் 
நாட்டான்
பாட்டுக்களை கேட்டாலும் 
நாட்டு நடப்புக்களை 
அறிந்தவன் நாட்டான்

கல்விமான்களை கவரிமான்களை 
நினைப்பவன்
நாட்டான்
கல்வியல் கரைகானத்துடிக்கும்
நீச்சல்காரனும்
நாட்டான்

இத்தனைக்குள்ளும்
கிராமத்தில் படித்தவனை
நகரத்துச் சில முட்டாள்கள்
அழைக்கும் வார்த்தையும்
நாட்டான்!!
இவற்றையெல்லாம் அறிந்திராதவனும்

காட்டான் எனும் நாட்டான்

தொட முடியா தொலைவில்



பருந்து போல 
உயருது பால்மா
விருந்து கொடுக்கமுடியா
விலையில் அரிசிமா

அருமருந்தாய்ப் போனது 
மண்ணெண்ணெய் 
வருவலையும்
அவியலாக்கியது தேங்காயெண்ணை 

கறிக்கு புளிமாங்காய் போல் 
தேங்காய் 
சதா சாப்பாட்டில் 
கத்தரிக்காய் 

பொறுக்க முடியவில்லை 
இந்த வாழ்க்கைச் செலவு 
தாக்குப்பிடிக்கவில்லை 
தகுமான வரவு 

தோசைக்கு இனி  இல்லை
சட்னி 
ஏழைகளுக்கு உண்டு 
வாழ்வில் பட்டினி

தேடல்




வசந்த கால 
மேகங்களில் பார்க்கிறேன்
கடந்த கால 
சோகங்களை 
கூடவே  
வேதனையுடன் மீட்டிப்பர்கிறேன் 
வடுக்களை .......
கார்கால தூறல்களின் 
துருக்கள் அதில் படிந்திருக்கின்றன

உயிரோடு பிணமாக



flw; fiuNahuk; miyfspd; ,iur;ry;
,jkhf ,Ue;jJ fhw;W
Kj;jq;fs; gwpkhwp
mtsJ fuq;fisg; gw;wpapUe;Njd;       
md;G nkhop Ngrpdhs;
vy;yhf; ftiyfSfk;
kwe;J Ngha; yapj;jpUe;Njd;
gioa fijfs; nrhd;dhs;
vdf;Fk; fz;fs; fyq;fpd
mts; fz;fs;
,dpnahU NghJk;
fyq;fplnt $lhJ
cWjpahf KbntLj;Jf;nfhz;Nld;
mtis kidtpahf mila
ehd; NgW ngw;wtd; vd;Nwd;
mts; mwpT MSik ijupak;
vy;yhKk; vdf;Fg; gpbj;jd
,iwtdpd; nfhil vd;Nwd;
mtSk; cyif kwe;J
If;fpakhfp ,Ue;jhs;
mtisNa kwe;J nrhd;dhs;
vdf;F NtW njupTfSf;F
mtfhrkpy;iy
fhyk; vid epu;g;ge;j;jpJ
mJ jhd; cz;ik vd;whs;
vdf;F cyfNk ,Uz;L NghdJ
capu; Nghd typ
flw; fiuf;fhw;W njhe;juthdJ
fliyfsw;Wj; njupe;jJ
gpzkhf vOe;Njd;
tPL vd;w fy;yiwf;Fr; nry;y……….

இலங்கையின் எழில்


ஊடகம்


காயல் பட்டின இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் மகளிர் அரங்கில் வாசிக்கப்பட்டது .



இனி வரும் நூற்றாண்டுகள் 
இதன் ஆளுகையில் தான்
ஊடகம்
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் 
குத்திக்கூறு போட
மேற்குலகு
பயன்படுத்தும் பேராயுதம்


நாமெல்லாம் கவனிக்காது
தூக்கிப்போட்ட்         
தாக்குதல் கருவி 
மகிமை புரியாது 
புறந்தள்ளிய கூராயுதம் 
ஊடகம்
இதை 
கையாளத் தெரிந்தவன்  
உலக நாயகன் 
அனைத்தையும் தீர்மானிக்கும் 
அதி உயர் சக்தி.
  
நேற்றைகளைப் புரட்டிப்பார்க்கிறேன் 
உலகத்தூதர் பயன்படுத்திய 
அதி உச்சத்தை கான்கிறேன்
மக்களெல்லாம் ஓன்று திரட்டி 
மலைக்குன்றின் மீது நின்று
நான் இறைவனின் தூதன் 
அல்லாஹ் மட்டுமே இறைவன் 
என்று உரத்து முழங்கிட
அன்று அதி உச்ச ஊடகம்
அரபா மலைக்குன்று 
என் சமூகமே
தூதர் காட்டிய
அழகிய வழிமுறைகளை 
தூரத்தே எறிந்து விட்டு
எப்படி நிம்மதியாக 
தூங்க முடிகிறது?

உன் எதிரிகள் கீலங்கீலமாய்
கிழித்தெறிய கண்ணுற்றும்
எத்தனை நாளைக்குத் 
தொடரும்
இந்த மௌனம்.........?
உனக்கென்றொரு
தினசரிப் பத்திரிகை கிடையாது
வானொலி அலைவரிசை கிடையாது
உனக்கென்றொரு
தொலைக்காட்சி அலைவரிசை கூடக்
கிடையாது...
எப்படி -நீ 
நாளைகளை வெல்லப்போகிறாய்...?


வெறும் உணர்வுகளில் முக்குளித்து
வாய் கிழியக் கத்தினால்
உன் பிரச்சினைகள்
தீரும் என்று
எப்படித் துணிய முடியும் ?

உன் எதிரி
குண்டு வைப்பான்
வெடிக்கச் செய்வான்
பல நூறு உயிர் கொல்வான்

இங்கு -
ஊடகங்களின் வாயில் தீனி 
முஸ்லிம் தீவிரவாதி 
இஸ்லாமியப் பயங்கரவாதி 
எங்கும் தலைப்புச் செய்தி 
'முஸ்லிம் தீவிரவாதிகள் 
குண்டு வைப்பு 
நூறு பேர் கைது "


வெட்கமில்லை உனக்கு 
பிரியாணியில் கைவைக்க 

இன்று வரை சிறையில் வாழும் 
தீவிரவாதியை 
முத்திரை குத்தப்பட்ட 
அப்பாவிகளுக்காக 
என்ன குரல் கொடுத்துவிட்டாய் ?

நாளை முஸ்லிம் உயர்ந்து நிற்பான்
நாளை இஸ்லாம் -
உலகை வெல்லும் -நாளை
நாமெல்லாம் ஆட்சியாளர்கள்
எத்தனை நாளைக்கு
நாளை மீது பாரம் சுமத்தி
கற்பனையில் சரித்திரம் படைப்பது ?


உனக்கென்ன பழமிருக்கிறது இங்கு?
பாபர் மஸ்ஜித்
இடிக்கப்பட்டபோது
கோவையில் அப்பாவிகள்
கைது செய்யப்பட்டபோது
குஜராத்தில் முஸ்லிம்கள்
எரித்துக் கொல்லப்பட்டபோது
உன் -உரிமைகள் 
பறிக்கப்பட்டபோது 
உனக்காக குரல் கொடுக்க 
உனக்கென்றொரு
தனித்துவ 'ஊடகம் '
இல்லாமல் போனது 
உன் ரோசத்திக்கிலரவில்லையா? 
உலக அரங்கில்
உனக்கென்ன பலமிருக்கிறது?
முதல் கிப்லா
முற்றுகை இடப்பட்டபோது
செச்சினியா ,டாகேஸ்தான்
துவம்சம் செயியாப்பட்டபோது
பொஸ்னியா
;நிர்மூலமாக்கப்பட்டபோது 
ஆப்கான் ஈராக் தாய்லாந்து சீனா
என்று 
இன்று வரைத் தொடரும் 
அவலங்களுக்கு ................

உன்
எதிரி தருவதுதான் விளக்கம்
உன்
எதிரி சொல்வதுதான் செய்தி
உன்னைத்தீர்மானிப்பது
எதிரிகளின் ஊடகம்

உன்
குரல் வலை நசுக்கி
சப்தத்தை பறித்து
எதிரி உன்னை கட்டமைக்கிறான் 


என் அருமைச் சமூகமே
இப்போது சொல் ...
உனக்கான தனித்துவ
ஊடகத்தை -எப்போது
நிறுவப்போகிறாய்?

-ஷாமிலா ஷெரிப் -
இலங்கை .

குறிப்பு -மகளிர் அரங்கில் போலி பெண் நிருபர் படம் பிடித்ததால் என் படம் இங்கு இடம் பெறவில்லை


சொல்லாமலே............



எனக்குள் தேங்கிக் கிடக்கும்
ஏக்கப் பெருமூச்சுக்கள்
நைல் நதியாய்ப் பெருக்கெடுக்க
பல தடவை நினைக்கிறது.......
அணை போட்டு
தோற்றுப்போகிறேன்

எதையும் ஆராயாது
எப்படியும் பேசும்
பண்டிதர்கள்...... 
எதுவுமே புரியாது
மாற்றாரின் கதைகளையே நம்பும்
பாமரர்கள்......
தெருவில் பேச்சுக்குப்பை பொறுக்கும்
வேலையில்லாக் கூலிகள்
இவர்களுடன் சேர்ந்து
மொட்டத்தலைக்கும்
முடங்காலுக்கும்
முடிச்சுப்போடும்  
உறவினர்களில் சிலர் 
இவர்களை அறியக்கிடைத்தமை 
என்-
இலக்கியப்பரவளுக்கு கிடைத்த 
மிகப்பெரிய வெற்றி  


யுத்தத்திற்குப் பின் 
எழுதுவதற்கு 
கரு இல்லாமல் தவித்த 
நான் 
இன்று இலக்கியத்திற்கு 
முற்றுப்புள்ளி
 வைக்கமுடியாமல் 
தவிக்கிறேன் .

உடன் போக்கு





காலம் எனும் 
தாளிளொரு 
கவி எழுத நினைகின்றேன் 
இங்கு 
எதிர் காலம் 
உண்டென்பதே சந்தேகம் 
அவ்வாறிருக்க இன்னொரு
ஜென்மம் 
எப்படி வரும் ?
மறக்க நினைத்தாள் 
நீங்காத 
நினைவுச்சின்னம் நீ 
அன்பினால் 
அரவனைக்கப்பட்ட நம்மை 
ஆசையினால்
பிரித்துவிட முடியாது 
உன்னை 
விடிவெள்ளியாய் 
காணும் வரை 
காத்திருக்க முடியாது 
இனி நானும் 
வந்து விடுகிறேன் 
விண் மீனாக 
உன்னுடன்