Saturday, December 17, 2011

உன்னுடனான எனது பகிர்வுகள்

இத்தனை நாட்கள்
உன் -
தொடர்பின்றியே கழிகிறது
உன்னை எங்கு
தேடுவது ????????????
நீ
எங்கிருப்பாய் என்று
ஊகித்து -
தோற்றுப்போகிறேன்
தொடர்பில்
இருந்த நாட்களை விட
உன்னை அதிகம்
நேசிக்கிறே..........

என்னை இப்படி
அலைய விடுவது
எந்த வகையில்
நியாயம் ?

ஒரு வார்த்தை
குறுந்தகவல்
அனுப்பினால்
உன்
வங்கி மீதி
குறைந்து விடுமா ??

தெருவில் உள்ள
 பிச்சைகரர்களுக்கு போடும்
அந்த
மனது கூட
உனக்கு இல்லாமல்
போனதென்ன ?

2 comments:

  1. //ஒரு வார்த்தை
    குறுந்தகவல்
    அனுப்பினால்
    உன்
    வங்கி மீதி
    குறைந்து விடுமா ??//

    கணக்கு மீதி குறைந்து விடுமோ என்று பயந்தாந்களோ தெரியல..

    ReplyDelete