மச்சான் ,
உனக்கான என்னை
தினமும் தயார் படுத்துகிறேன் ................
இருந்தும்..
மரத்தில் இருந்து
விழுந்த பழத்தை
கொத்தி பார்க்க
நினைக்கும் காக்கைகள்
கூட்டம் .................
ஆடு நனைதுன்னு
அழும் ஓநாய்கள்
கூட்டம் ..................
தானாக வந்து
முட்டும்-எருமைகள்
கூட்டம் ..........
பாசம் காட்டுவது போல்
வேஷம் போடும்
பச்சோந்திகள்
கூட்டம் ...............
இப்படி ஒரு
மிருககாட்சி சாலையில்
தினமும் பயணிப்பது
சவாலாகி விட்டது ....
இந்த மனு
உன் மேலான
கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது .!