Monday, October 24, 2011

மௌனியாய் பயணிக்கிறேன்








இது வரை 
என் வாய்க்கு 
இப்படி ஒரு 
தாழ்ப்பாள் இட்டதில்லை நான் 
உன் பிரிவு 
எனை -
முழுமையாய் கட்டியாள்கிறது
எதை விடுவது 
எதை தொடுவது 
இல்லை -எதை 
விட்டு ஒதுங்குவது 
எதனையும்  கற்றுத்தரவில்லை நீ 
அதனால் நான் 
மௌனியாய் பயணிக்கிறேன் .......................
இப்போது எனக்குத் 
தெரிந்தது எல்லாம் 
தனித்திருந்து உன்னை நினைப்பது தான் 

1 comment: