Tuesday, September 2, 2014

ஃபேக் ஐடி

இப்போது ஃபேக் ஐடி எனும் முகநூல் பக்கங்களின் அதிகரிப்பு நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ச்து செல்வதை அவதானிக்கலாம். ஒரு வரை தரம்குறைத்துப் பேசவும் அவமானப்படுத்தவும் இந்த ஐடி களையே முகம் தெரியாத நபர்கள் பாவிக்கிறார்கள். ஒருவரின் படத்தைப் பாவித்து அவரது பெயரிலேயே ஒரு போலி முகநூல் பக்கத்தையும் தொடங்கி வேண்டாதவர்களை அவமதிக்கும் செயலைச் செய்பவர்கள் நிச்சமாக மனிதப் பெறுமானங்கள் அற்றவராகவே இருப்பர். இப்படிப்பட்டவர்களை இனங்கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதோடு அவர்களுத் தண்டனையும் பெற்றுக் கொடுப்பது மிகவும் முக்கியமான விடயம்.

எனது பெயரையும் படங்களையும் பயன்படுத்தி நான் கற்பிக்கும் பாடசாலைக்கு எதிராகவே மிக மோசமான சொல்லக் கூசும் வார்த்தைகளைக் கொண்டு தூற்றும் நடவடிக்கையினைச் சிலர் அன்மைக்காலமாக செய்து வருகின்றனர். அவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிற்பார்கள் அப்போது அவர்களைப் பார்த்து சமுகம் கை கொட்டிச் சிரிக்கும்.
 இதில் மிகவும் கவலைகிடமான வேதனை தரும் விடயம் விடயம் ஃபேக் ஐடிகள் மூலம் பரப்பப்படும் விடயங்களை பாமரர்கள் மட்டுமல்லாது படித்த உயர் அதிகாரிகள் கூட நம்பித்தொலைவதுதான். அவர்களின் அறிவு அவ்வளவுதான் என்று நாம்தான் அமைதியாக இருக்கவேண்டும்.

எல்லாக் குற்றவாளிகளும் ஏதோவோர் தடயத்தை விட்டுச் செல்கின்றனர் எனும் முதுமொழி போலி முகநூல் பக்கம் செய்யும் இவர்கள் விடயத்திலும்  பொய்யாகவில்லை. கேலமான அந்த ஜந்துகளை நான் சபிக்கிறேன். அவர்கள் நாசமாய்ப் போக. உலகிலும் மறுமையிலும் இழிந்தவர்களாக அல்லாஹ் அவர்களை ஆக்கட்டும்.
எல்லாவற்றுக்கும் அல்லாஹ் ஒருவனே போதுமானவன்.

No comments:

Post a Comment