Friday, September 20, 2013

ஒர் இஸ்லாமியப் பெண் தொலைக்காட்சி ஒன்றில்......

விஜய் தொலைகாட்சியின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியிலே பங்கு கொண்ட முஸ்லிம் சகோதரயின் கானொலியினை முகப்புத்தகம் ஒன்றில் பார்க்கக் கிடைத்தது. நானும் அந்த பக்கத்தினை லைக் செய்திருக்கிறேன்.நியாயமான கேள்விகளுடன் அந்த முகப்புத்தகம் அமைந்திருந்தது.அதற்கு பல பின்னூட்டங்களை காணக் கிடைத்தது.ஆதரவாகவும் எதிராகவும்.பிழை நடக்கும் போது அதனை சுட்டிக்காட்டும் உரிமை யாருக்கும் உண்டு.உரியவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும்.இதற்கு  முதலில் அந்த நிகழ்ச்சியை நான் தொலைக்காட்சியில் பார்த்த போது இது குறித்து எழுத நினைத்திருந்தேன்.ஆனால் வேலைப்பளு காரணமாக மறந்து விட்டேன்.

நமது சமயத்தில் பலர் விடும் தவறு என்னவெனில் பிழைகளை சுட்டிக் காட்டும் போது சமயத்தின் பெயரால் தவறுகளை மறைக்க நினைப்பது தான் .நித்தியானந்தாவின் கானொலிகளை  பார்த்து விமர்சிக்கும் நம்மில் சிலர் ,ஏனைய மாற்று மத சகோதரிகளின் செயல்களுக்கு பின்னூட்டம் வழங்கும் நம்மில் சிலர்,கருத்துகளை தெரிவித்து பெண்ட் எடுக்கும் பலர், நமது தவறுகளை இஸ்லாத்தின் பெயரால் மறைக்க நினைகின்றனர்.இப்படி பூட்டிப் பூட்டி வைத்து எத்தனையோ பேர் சீரழிந்து போகின்றனர்.நமது சமூகமும் கெட்டுக்  குட்டிச் சுவராக போகிறது.

ஒர் இஸ்லாமியப் பெண் தொலைக்காட்சி ஒன்றில் எவ்வாறு தோற்றமளிக்கனும் என்பதனை அறிந்து வைத்திருத்தல் வேண்டும்.செய்மதியூடாக தொலைக்காட்சி சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ள இக் கலிகாலத்தில் உலகம் முழுதும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறனர்  என்ற அடிப்படை அறிவு கூட இன்றி நான்கு சுவரில் பேச வேண்டிய விடயங்களைப் பேசுவதும் மறைக்கப்படவேண்டிய பாகங்களைக் காட்டுவதும் அநாகரிகமான செயலாகும்.இதற்கு வக்காலத்து வாங்குகின்றவர்கள் வேறு.இலக்கியம் கலை  என்றபெயரில் நம் நாட்டிலும் பெண்கள் மறைகப்படவேண்டிய பாகங்களை திறந்து காட்டிக் கொண்டு புகைப்படங்களை சமூக தளங்களில் பிரசுரிப்பதும் அதற்கு நம் சமூகத்திலே ஒரு கூட்டம் வரிந்து கட்டிக் கொண்டு பின்னூட்டம்  வழங்குவதும் அருவருக்கத்தக்கது.அதற்கு எதிரான கருத்துக்கள் வரும் போது தங்களை  விமர்சிக்கின்றனர் என அறிக்கை விட்டு பலனில்லை.முஸ்லிம் பெண் என்பவள் யார் என்பதை அவளே உணர வேண்டும்.தான் கதைப்பது மார்க்க வரையறைக்குள் உள்ளதா என்றும் தன்னுடைய அவ்றத் என்ன என்பதையும் அவள் அறிய வேண்டும்.கைக்குட்டை போன்ற துண்டினை தலையில் போட்டு நீங்கள் முஸ்லிம் பெண் என்று காட்டுவதினாலே பிறர் விமர்சிக்கின்றனர் என்பதனை சிந்திக்க வேண்டும்.உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ளும் போது இன்னொருவர் விமர்சிக்க இடமிருக்காது.அதனை விட்டுப் போட்டு சுதந்திரம் சமத்துவம் பேசினால் இப்படி சந்தி சிரிக்க வேண்டி வரும். 

No comments:

Post a Comment