Tuesday, October 25, 2011

மச்சானுக்கோர் மனு


மச்சான் ,
உனக்கான என்னை 
தினமும் தயார் படுத்துகிறேன் ................
இருந்தும்..

மரத்தில் இருந்து 
விழுந்த பழத்தை 
கொத்தி பார்க்க 
நினைக்கும் காக்கைகள் 
கூட்டம் .................

ஆடு நனைதுன்னு 
அழும் ஓநாய்கள் 
கூட்டம் ..................

தானாக வந்து 
முட்டும்-எருமைகள் 
கூட்டம் ..........

பாசம் காட்டுவது போல் 
வேஷம் போடும் 
பச்சோந்திகள் 
கூட்டம் ...............

இப்படி ஒரு 
மிருககாட்சி சாலையில் 
தினமும் பயணிப்பது
சவாலாகி விட்டது ....

இந்த மனு 
உன் மேலான
 கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது .!

2 comments: