தினமும் எனக்குள்
பல கேள்விகள்
எழுந்து கொண்டே
இருக்கின்றன ......
யாரிடம் கேட்பது ?
என்பது ஒரு
கேள்வி ..............
கேட்டால் என்ன
நினைப்பார்களோ
என்பது மற்றொரு
கேள்வி .............
ஏன் இவர்கள்
இப்படி என்றொரு கேள்வி
நாங்கள் எப்படி இருந்தால்
உங்களுக்கென்ன
இன்னுமொரு கேள்வி .......
மனிதர்களா இவர்கள்
இது எல்லோரின்
கேள்வி .........
எவ்வளவு காலம்
நீடிக்கும் என்பது
தினம் ஒரு
கேள்வி .......
இதுவா சர்வதிகாரம்
என்பது எனது
கேள்வி ........
ஜனநாயகத்துக்கு
வரைவிலக்கணம் என்ன ?
இது மக்களின்
கேள்வி ..........
கேள்வி கேட்டா
அடி விழுமா ?
இது மாணவர்களின்
கேள்வி .......................??????
No comments:
Post a Comment