Wednesday, November 30, 2011

முஸ்லிம் பெண்களும் காதிநீதி மன்றங்களும்

முஸ்லிம் பெண்கள் உலகில் எவ்வளவோ முன்னேறி இருந்த போதிலும் இலங்கையில் அவர்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது .மன வாழ்வு கசந்து போய் இனி வாழ முடியாது என்று கருதுகிற பட்சத்திலே காதி நீதி மன்றம் நோக்கி செல்கிறாள் .இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால் இலங்கையில் காதி என்பவர் யார் ?அவருக்குரிய அலுவலகம் எது ?காதிக்குரிய தகைமைகள் என்ன ?காதி எவ்வாறான கேள்விகளை கேட்க வேண்டும் ?என்ற விடயம் எல்லாம் எழுதப்படாத சட்டமாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும் .

ஒருவருக்கு ஓய்வூதியம் கொடுப்பதன் நோக்கம் அவர் ஓய்வாக இருக்க வேண்டும் என்பது தான்.ஆனால் இங்கு ஓய்வு பெற்றவரே சில சமயங்களில் காதி நீதவானாக இருக்கின்றார் .இல்லாவிடில் ஊரில் பெரியவரோ மார்க்க பெரியார் ஒருவரோ நியமிக்கப்பட்டுள்ளார் .இரண்டு உள்ளங்களுக்கிடையில் தீர்ப்பை வழங்குபவருக்கு இருக்க வேண்டிய தகைமை என்ன என்பது பற்றி எங்கும் குறிப்பிடவில்லை .

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆரோக்கியமான  கலந்துரையாடல் ஒன்று சென்ற வாரம் கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம் பெற்றது .   

No comments:

Post a Comment