Wednesday, September 28, 2011

இலக்கியப்பகிர்வு

இலக்கியம் தொடர்பான காத்திரமான கலந்துரையாடல் தேவைப்படுகிறது. இலக்கியவாதிகள் பலர் தம் உள்ளக்குமுறலை வலைத்தளங்களில் வெளிப்படுத்தி இருப்பதை காணலாம் .சங்கப் புலவர்களிடம் காணப்பட்ட மன நிலையே பலரிடம் உள்ளது.என்னிடம் சிறந்த,தன்னடக்கமுள்ள பல இலக்கிய வாதிகள் கேட்கும் கேள்வி "ஏன் நீங்கள் உங்களை அடையாளப்படுத்துவதில்லை ?"

இந்த இடத்தில் எனக்கு நினைவு வருவது ,ஒருமுறை குலோத்துங்க சோழனிடம் சென்ற குமாரப்புலவரும் அவரிடம் மாட்டிக்கொண்டு தவித்த சேவகனும் தான்.குமாரப்புலவனைப்போல் தமது பெருமை பாடும் இலக்கியவாதிகள் பலர் இங்கு. அதனால் அரங்குகளில்  கூட பங்கு பெற நினைப்பதில்லை .நான் மதிக்கும் புலவர் ஜின்னா சரிபுத்தீன் என்னிடம் சொன்னார் "எதற்கு நீ புனைப்பெயரில் எழுத வேண்டும் ம்மா உன் பெயரிலே எழுது என்றார்." அதற்கு காரணமும் சொன்னார் .அவர்கள் சொல்வது உண்மை தான் ஆனாலும் நான் அவரிடம் குமாரப்புலவர் பற்றி சொல்லவில்லை .காயல் பட்டின மாநாட்டிற்கு பிறகு தான் பல விடயங்களை அறியக்கிடைத்தது எனக்கு .

No comments:

Post a Comment