கடந்த காலங்களை மீட்டிப் பார்க்கிறேன்.அமைதியான அர்த்தம் நிறைந்த வாழ்வு என்று நினைத்ததெல்லாம் பொய் .கொஞ்சம் கூட புரிந்துணர்வு இல்லாதவர்களுடன் தான் பழகி இருக்கிறோம் என நினைக்கும் போது வேதனையாக உள்ளது.ஒரு பிரச்சினை ஏற்பட்ட போது ஏன் ?எதற்கு?எப்படி ?எவ்வாறு?என்ற சொட்களைஎல்லாம் பயன்படுத்தாதவர்கள் தான் எம் உறவினர் என நினைக்கும் போது வேதனையாக இருப்பினும் எதனையும் விளக்கம் சொன்னால் தான் விளங்கிக்கொள்வோம் என இருக்கும் முட்டாள்களுடன் பேசாது காலம் பதில் சொல்லும் வரை மௌனமாக இருப்பது தான் சரி.
எல்லா விசயத்தையும் எல்லோரிடமும் சொல்ல முடியாது."ரகசியம் நமக்கு அடிமை.அந்த ரகசியம் வெளிப்பட்டால் அந்த ரகசியத்துக்கு நாம் அடிமை"என யாரோ ஒருவர் சொன்னது உண்மை தான்.நாம் பழகும் படித்த வட்டம் எமைப் புரிந்து கொண்டாலும் படிக்காத வட்டம் தொடர்ந்து மனதை நோகடித்துக் கொண்டு தான் இருக்கின்றது.இங்கு அதிசயம் என்ன வென்றால் சில நாட்கள் பழகியவர்கள் கொண்டிருக்கும் திடம் பல நாட்கள் பழகியவர்களிடம் இல்லை என்பது தான்.
No comments:
Post a Comment