Saturday, April 21, 2012

அவனுக்கு

நீ இருக்கும் போது
போடும் சண்டை
இல்லாவிடில்
குழம்பிப்போகிறது
மண்டை.

நம் வீட்டு
சாப்பாட்டு மேசை
அழகாய் இருக்கிறது 
அழுக்கு போட தான்
யாருமில்லை. 

ஒரு நாள்
பிரிவெனினும்
பல நாள்
வலிகளை தந்து விடுகிறது  
உன் நினைவுகள்.

வழி மேல் 
விழி வைத்துக் காத்தவளாய்
நானும் என் சமையலும்... 

  

No comments:

Post a Comment