Thursday, July 5, 2012

மனம் திறந்து .......

சில விடயங்களை  மனம் விட்டுப்பேசி விடலாம்.சில விடயங்களை பேசாமல் அதன் போக்கிலே விட்டு விடலாம்.சிலநேரங்களில் வாதாடலாம்.வாதாடி வெல்ல முடியாத விடயங்களை பேசாமல் இருப்பது தான் நன்று.கொஞ்சம் காலமாக எனது நண்பர் ஒருவர் என்னுடன் பேசுவதில்லை.அதற்கு குறிப்பிட்டு சொல்லுமாறு எந்தக்காரணமும் இல்லை.ஆனால் நாங்கள் பேசிக்கொள்வதில்லை.நான் ஒரு நூல் தான் வெளியிட்டேன்.அப்பாடா................................................................................... ஆயிரம் பிரச்சினை.அந்த நூலுக்கு விமர்சனம் எழுத யாரிடமாவது நான் சொல்ல வேண்டுமாம்.நேர்காணல் கொடுப்பதென்றால் அவர்கள் சொல்லுவதைப்பேச வேண்டுமாம்.என்னைப் பற்றி நானே மற்றவரிடம் சொல்லணுமாம்.ஏனெனில் பொறாமை நிறைந்த இலக்கிய உலகு அடுத்தவரின் திறமையை வெளிச்சம் போட்டுக்காட்டாதாம்.இப்படிப் பல ...........................................
நான் ஒரு நூல் வெளியிட்டதால் அந்த நண்பருடன் பிரச்சினை வரும் என்று தெரிந்திருந்தால் நூலை pitpottirukkalaam .ஆனால் தெரியவில்லை.

இங்கு அதிசயம் என்ன வென்றால் நண்பர் சொன்னதற்கு மாற்றமாக எல்லாம் நடந்தது.அனைத்து ஊடகங்களும் என் நூல் வெளியீட்டு விழா பற்றி செய்திகள் வெளியிட்டன.இது பற்றிய அவர்  கருத்தானது பெண் என்றால் அமெரிக்க ஜனாதிபதியும் செய்தி போடுவார் என்பது.பின்னர் விளையாட்டுக்காக போடப்பட்ட பின்னூட்டம் எங்கள் நட்பை இன்னும் விரிசலாக்கியது.இது வரை அந்த நண்பர் தொடர்பேட்படுத்த வில்லை.ஓன்று மட்டும் உண்மை சரி, பிழை தெரியப்படும் .அப்போது பிழை சரியாகவும் சரி பிழையாகவும் மாறிவிடாது............

நல்ல நட்பை விடுவது என்றால் கொஞ்சம் என்ன அதிகமாகவே கஷ்டம் தான்.அதற்காக கொள்கைகளை மாற்றிக்கொள்ளவோ புப்ளிசிட்டி பைத்தியமாக அலையவோ முடியாது.

ஷாமிலா ஷெரிப் 

No comments:

Post a Comment