Saturday, March 16, 2013

நீ என்ன கொம்பனா?



நீ
முன்பு கொத்தியதெல்லாம்
தேக்கு, பலா
வீரை, முதிரை
நான் வாழை
நீ மரங்கொத்தி!
மறந்துவிடாதே.

ஆப்பிழுத்த குரங்கு போல
நீ படும் பாடு கண்டு
இங்குள்ள காட்டு மிருகங்கள்
வேதனைப்படுகின்றன.
அவைகளுக்கும் சேரத்து
சொல்லி வைக்கிறேன்
உன் மிருக்ககாட்சி சாலைக்குள்
பறவைகள்
கூடுகட்டி வசிக்கின்றன
தண்ணீர்வற்றியதும்
பறந்துவிடுமெனச்
சிங்கம் சொன்னதால்
விட்டுவிடுகிறேன்.

நீ சுண்டெலி
நெல்லை நறும்பவும்
புனைக்கு தாப்புக்காட்டவுமே
உன்னால் முடியும்
உன்முகத்தைப் பார்த்து
புனைக்குட்டிகள் ஒதுங்கிக் கொள்கின்றன
சாப்பிட மனமின்றி
பயந்துவிடுவதாய் அர்த்தம் கற்பிக்காதே.

நீ நரி
காட்டிற்குவரும் காகத்தையெல்லாம்
கூட்டாளிபிடிக்கிறாய்
வேட்டைநாய் குரல் கேட்டால்
ஓடும் திசைஉனக்கே தெரியாது,

நீ குப்பைக்காகிதம்
காற்றுக்குமேலெழுந்து
கதிரையில் கிடந்தாலும்
சங்கமிப்பது
மீண்டும் தெருக்குப்பையோடே.

No comments:

Post a Comment