Friday, April 29, 2016

தனிமை


இந்த அமைதி பொல்லாதது
என்னை பனியில் உறைத்து விடுகிறது
கடலில் மிதந்து
கரையேறும் போது
மீண்டும் யாரோ வந்து
தள்ளி விட்டுச் செல்கிறார்கள்

குழந்தை தண்ணீரில் விளையாடி
மகிழ்கிறது.
என்னால் கரையொதுங்க முடியவில்லை
மீண்டு ஆழத்தினை நோக்கி நகர்கிறேன்

அண்டை வெளியது
யாருமற்ற அந்த நிலப்பரப்பு
என்னை மிருதுவாய் இழுத்துச் செல்கிறது
நான் உணர்கிறேன்
முன்னொரு போதும் கிடைத்திடாத. இனிமை..
சலனமற்ற அந்த பொழுதில்
எல்லாவற்றையும் துறந்துவிடுகிறது


No comments:

Post a Comment