கடும் வரசியிட்குப் பின்
பெய்த மழை போல
உன் வரவு -அதனால்
என்னவோ
செழிப்படைந்தது உள்ளம்
மாரி காலத்து
அடை மழை போல
ஓயாத குறுந்தகவல்
தொலைபேசியில்
பார்த்து- தினம் தினம்
நெகிழ்வடைந்து நின்றேன்
வசந்த காலங்களை
மீட்டிப் பார்க்க வைத்தது
உன் நட்பு .
செய்தி கண்டு
நீண்ட நாட்களுக்குப் பின்
என் கவிதை
அலங்கரிக்கப்பட்டது .
மழையில் நனைந்து
குளிரில் நடுங்கி
உறவாடிய -அந்த நாட்கள்
கார்கால மேகங்களை
தொட்டுவிட்டுச் சென்றது .
இப்பொழுதெல்லாம்
ஏனோ
ஆங்காங்கே ...
தூறல்கள் மட்டும் .
No comments:
Post a Comment