Saturday, January 7, 2012

நினைவின் விளிம்பில்

காதல் கவி -எழுதவில்லை
உனைக் காணும் வரை
கண்ணீர்க் கடலில்
மூல்கவுமில்லை
காதலிக்கும் வரை

சங்க காலம்
படிக்கையில் -புரியவில்லை
பிரிதல் ஒழுக்கம்
நீ- எனைப்பிரிந்த போது
அன்பினைந்தினையும்
அறிந்து கொண்டேன் .

உன் -
திருமணச் சேதி
காதிலடிபட்டபோதும் -நான்
கணக்கெடுக்கவில்லை
அது தான்-உனக்கு
விதியென்று !

இன்று
காலம் பதில் சொன்னாலும்
காத்திருப்பேன் என
காதல் கடிதங்கள்
பறை சாற்றினாலும்
நீ -
இப்போது
நீயாக இல்லை
அதனால்
நானும் நானாக இல்லை 

No comments:

Post a Comment