Tuesday, January 10, 2012

நான் விரும்பும் நீ







"ஓர்-அத்தியாயத்தின்
சரித்திரப் புள்ளியாக
நான் ஏன்
இருக்கக் கூடாது ?"என
விளிக்கும்
உன் சினி வாசகம்
பார்த்து -(நான் )
விரும்பும்
நீயாக
ஏன் இருக்கக் கூடாது ?
என்கிறேன் .

எதற்கு இந்த
சமூக சேவை
என்பதை விட
ஏன்
இந்தத் தேவை
இல்லாத
வேலை எனத்
தோனுகிறது
தினமும் எனக்கு .

யாருக்குமில்லாத
தேசப்பற்று
உனக்கெதற்கு ?
அதற்கு
உனக்கு கிடைத்த
பெயரும் -நீ
அறியாததல்ல .
அதை -உன்
பற்று நீக்கிவிடுமா?
யார்
எப்படிப்போனால் தான்
உனக்கென்ன
வந்துவிடப்போகிறது ?

நீ
காட்டும் பற்றுக்கள்
உன்னை
வாழவைத்ததா???

யாரை
நம்பக்கூடாதென்று
மார்க்கம் பயின்ற
உன்னாலும்
நம்ப முடியாது
போனதேன் ?

உன்னிடம்
கேட்பதெல்லாம்
ஒன்றே ஓன்று
நான் விரும்பும்
நீயாக
ஏன் இருக்கக் கூடாது?




No comments:

Post a Comment