Sunday, February 26, 2012

வேட்கை


பனித்துளி போல் ஒரு வாழ்கை
அதில் -ஆயிரம் ஆயிரம் ஆசை
வெற்றியில் திளைத்திட வேட்கை
வளமாய் வாழ்ந்திட பேராசை
கண்ணீர் கண்டால் பெரும் சோகம்
துன்பம் வந்தால் பெரும் துக்கம்
இன்பம் மட்டுமே வேண்டி ஏக்கம்
மரணம் இன்றேல் என்று தாகம்

இழப்புகள் இன்றி வெற்றி கிட்டுமா?
துன்பம் இன்றி இன்பம் கிட்டுமா ?
அன்பு கொன்று வாழ்கை வெல்லுமா?
பாச வேஷம் களைந்து சொல்லடா
எதையும் தாண்ட துணிந்து நில்லடா
பகையும் தோற்று பணிந்து செல்லுமே

உனது வாழ்கை உந்தன் கையில்
எளிய உழைப்பு வழிய கையில்
துவண்டு போனால் தோல்வி உன்னில்
துணிந்து சென்றால் உலகம் பையில் . 

No comments:

Post a Comment