Thursday, March 15, 2012

முன்னுரை

நான் கவிதை எழுதுகிறேன் என்பதை விட என் உணர்வுகளை வெளிப்படுத்துகிறேன் என்பது தான் உண்மை .என் கவிகளுக்கு காலச் சூழலும் மனித நடவடிக்கைகளுமே களம் அமைத்தவை. இந்த வலைப்பூவில் என் முகவரி
தொலைக்கப்படும் என்பதற்காக எழுதியும் எழுதப்படாத கவிதைகள் இடம் பெறவில்லை. அவ்வப்போது எழுத நினைத்தாலும் ஏதோ ஒன்று ஆட்கொள்வதனால் என் உள்ளம் அமைதி பெறும்.
மனதில் உள்ள விடயங்களை வெளிப்படுத்தத் சிறந்த ஊடகம் தான் இலக்கியம்.
அதன் வடிவமான கவிதை படிப்பதற்கும் எழுதுவதற்கும் இதமானது. எல்லோராலும் எல்லா விடயங்களையும் புரிந்து கொள்ளல் முடியாது. சிலவற்றை சொல்லலாம் சிலவற்றை சொல்ல முடியாது. சொல்லித்தான் ஆக  வேண்டும் என்று இருந்தால் பொறுமையாக இருந்து தான் ஆக வேண்டும்.

No comments:

Post a Comment