Thursday, March 22, 2012

தனித்திருந்து காத்திருத்தல்



இது ஒன்றும் 
எனக்கு புதிதல்ல 
அதில் -
எத்தனை சுகம் 
என்பதுவும் 
நான் அறியாததல்ல 

என்னில் -நீ 
காண்பது 
வலிகளல்ல...
உன்னை காணாத 
வழிகளில்- என் 
விழிகளல்ல 

நித்தமும் 
காலடிச் சத்தம் 
கேட்பெதென்ன?
திரும்பும் 
போதெல்லாம் 
நிசப்தமென்ன ?

தனித்திருத்தல் 
பற்றி நீயும் 
காத்திருத்தல் 
பற்றி நானும் 
ஆய்வு செய்வோம் 

எங்காவது 
எனது  கேள்விகளுக்கு 
உனது ஆய்வில் 
விடை கிடைக்கும் 




No comments:

Post a Comment