Saturday, May 7, 2016

அந்த 7 அரை மாதங்கள் - அங்கம் 01

பெண் என்பவள் இறைவனின் மிக அழகான படைப்பு.ஒவ்வொருவருக்குமுள்ள இரசனை அவரரவர் சுவையை பொறுத்து வேறுபடுகின்றது.பெண்ணுக்கான குணாம்சங்களும் விருப்பபுகளும் எதிர்பார்ப்புகளும் யதார்த்தமானது.நாம் நினைப்பது வேறு.இறைவனின் நாட்டம் என்பது வேறு.

இறைவனின் நாட்டப்படியே என் வாழ்விலும் திருமணம் நடந்தேறியது.கல்யாணம் முடித்து இன்பகரமான வாழ்வு பாரதிராஜாவின் திரைப்படம் போல மிக அமைதியாக மேடு பள்ளமற்று சமதரையில் பயணிப்பதுபோன்றதொரு உணர்வை ஏற்படுத்திற்று.  எனக்கமைந்த வாழ்வும் என் கணவனின் குணப்பண்புகளும் ஆனந்தத்தின் உச்சிக்கு எனை அழைத்துச் சென்றது என்பது விமர்சகர்களுக்கு புள்ளி வழங்குவது போன்றது.

ஒருவரின் திருமணம் குறித்து இந்த சமூகம் என்ன பேசும் என்பதனை நான் நன்கறிவேன் ஏனெனில் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட முன்னரும் ஏப்பம் விட்டுக்கொண்டும் விருந்து கொடுத்தவரையே சேர்ப் எக்ஸல் போட்டு கழுவும் ஆசிரியர்களைக் கண்டிருக்கிறேன். இதில் என் விருந்துபசாரம் பற்றி சொல்லவும் வேண்டுமா?சிங்களப் படத்துக்கு போஸ்ட்டர் ஒட்டியது போன்று என் திருமணமும் பேசப்பட்டதற்கு காரணம் நான் என் கணவரிடம் கேட்டிருந்த மஹர் தொகை தான்.அதனை ஏதோ ஐஸ்வர்யா அமிதாப்பச்சன் மகன திருமணம் செய்த ரேஞ்சுக்கு ஒரு சில உறவினர்களும சில நண்பர்கள் போன்ற பெயரில் உலாவும் பொறுக்கிகள் விமர்சித்ததாக அறியக் கிடைத்தது.மஹர் தொகையை தீர்மானிக்கும் முழு உரிமையும் மனமகளுக்கானது என்றும் அதனைக் கூட்டுதல் குறைத்தல் தொடர்பில் கணவன் மனைவிக்கே உரிமை உண்டென்கிற அடிப்படை அறிவில்லாத மூன்றாம் கிளாஸ் பேர் வழிகள் என் கணவனை மிகக் காரசாரமாக விமர்சித்தாகவும் பின்னாளில் பௌராணிகர்கள் கதை கூறினர்.

இரண்டரை மாதங்களின் பின் என் கணவனை பிரிய நேரிடும் என நான் கனவிலும் நினைக்கவில்லை.எங்களின் மகிழ்ச்சியில் முக்கிய பங்கு அந்த வீட்டுக்குரியது.மயக்கம் விளைவிப்பது மாலை மாது மது போன்றவை மட்ட்மல்ல.கடலும் காற்றும் கரையும் அலையும் அதில் எழும் நுரையும் தான் என்பதனை அந்த வீட்டின் ஜன்னலூடாக பார்த்து நிரூபித்து  வியந்துள்ளேன்..
அலைகள் ஒயாது ஒன்றை ஒன்று துரத்தி விளையாடுதல் போல நாங்கள் இருவரும் அறை அறையாக மூடி விளையாடியது அவ்வளவு சீக்கிரம் முடிந்துவிடும் என்றும் நினைத்திருக்கவில்லை..

என்னுடைய பிரச்சனைகளையும் கவலைகளையும் அல்லாஹ்விடம் கொடுத்துவிட்டு நான் ரிலாக்ஸ் ஆக இருந்து விடுவதனைத்தான் வழக்கமாக்கி இருந்தேன்.வழக்கத்துக்கு மாறாக அவ்வளவு பெரிய பாரத்தையும் வலியையும் எதிர்பார்த்திருக்கவில்லை





No comments:

Post a Comment