Wednesday, June 1, 2016

வராத வெள்ளம்

கங்கை பெருக்கெடுக்க
பாய்ந்தோடி வந்த நீர்
உயர்வர்க்கத்தினர் வாழும்
தெருக்கள் கண்டும்
அவர்களின் வீடுகள் கண்டும்
பின் வாங்கியோடி
ஏழைகளையும்
மத்தியவர்க்கத்தையும்
தேடிச் சென்று வெள்ளக்காடாக்கிற்று.

வடிந்திட்ட வெள்ளம்
சேறாய் மாறி அந்தத் தெருவை
விட்டகன்று பயத்தில்
சேரிப்புறச்சுவருக்குள் ஒழிந்து கொண்டனவே
சேறுக்கும் நீருக்கும்
பிரித்தறியத்தெரிந்த வர்க்க பேதம்
வயிற்றுப்பசிக்கு மட்டும்
தெரியாமல் போனதுவோ

மண் மீசையில்
ஒட்டவில்லை என்பதனை
வானுயரப்பறந்த விமானம்
படம் எடுத்துக்காட்டிட
ஊடகங்களும் வெளியிட்டன...

No comments:

Post a Comment