Saturday, March 11, 2017

இடிபாடுகளுக்குள் சிக்குண்ட கவிதை-06


இருண்ட வானம்
கருக்கொண்ட மேகம்
வரண்ட மனிதம்
வழிநெடுகிலும்

உடைந்த குடை
நனைந்த உடை
குட்டைப்பாவாடை
அடை மழை
ஆமர்வீதியில்

இடிமின்னலில்
அவள் வயிற்றுப்பசி வெளிப்பட்டுத்தெறிக்கிறது
தினமும் பயணிக்கும் வீதியில்
முன்னொருபோதும் கண்டிராத
அந்தப்புதுமுகம்
என்னுள் பல கனைகளை தொடுத்திற்று..

பட்டினிக்கு
பெண்ணுடல் தான் தீர்வென நினைத்துவிட்டிருத்தாள்
குழந்தை விரல்களை நீட்டி
ஆன்ரி...என்கிறான்
மீண்டும்
அன்ரி பாவம் மா..
ஓம் மகன் அன்ரி பாவம்

No comments:

Post a Comment