Sunday, March 19, 2017

இடிபாடுகளுக்குள் சிக்குண்ட கவிதை- 07

வாசிக்கப்படாத கவிதையிடம்
வாசிக்கப்படாத புத்தகங்கள்
அதிகரித்து விட்டன
யார் யாரோ தந்து விட்டுப்போனதும்
தினித்துவிட்டுப்போனதும்
அடுக்கப்படவில்லை

அடுக்கியிருப்பதெல்லாம் வாசிக்கப்பட வேண்டியவை
புரிதலுக்கும்
விட்டுக்கொடுப்பிற்கும் இடையே
இந்தக் கவிதைப்புத்தகத்தை
செருகிவிட்டுச் சென்றார்கள்

அவன் வாசிக்க மறந்த நாவல்
மேசை மீது நீண்டநாட்கள்
விரித்துக்கிடக்கையில்
இடைச்செருகல் எவ்விதம் கண்ணில்படும்??
அவனுக்கு பிடித்ததெல்லாம்
அமானுஷ்யம் மட்டுமே

No comments:

Post a Comment