Sunday, February 5, 2012

நண்பனின் கேள்விக்கென்ன பதில் ?

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி .சமுதாயத்தில் நிகழும் ஒன்றை கதைகளாகவோ கட்டுரைகளாகவோ சிறுகதைகளாகவோ சிட்பமாகவோ சித்திரித்துக் காட்டுதலை இலக்கியம் என்கிறோம் .நாம் சாதாரண கண்களால் நோக்கும் விடயங்களை கவிஞன் அல்லது கலைஞன் கலைக் கண் கொண்டு நோக்குகிறான்இப்படி பேசிக்கொண்டிருந்த வேளை,
                                 என்னிடம் ஒரு நண்பர் கேட்டார் ,மருத்துவம் கற்பதால் பயனுண்டு .வர்த்தகம் கற்பதால் பயனுண்டு.கணிததுறையில் கற்றால் பயனுண்டு .ஆனால் நீங்கள் கலைத்துறையில் தமிழைக் கற்று என்ன பயன் ?எப்படி வருமானம் ஈட்டலாம் ?இதனால் யாருக்கு பயன்?என்று கேட்டார் .ஒரு நிமிடம் நானும் யோசித்தேன் .அவர் கேட்பதும் சரிதான் .இலக்கியம் ,தமிழ் என்று இருந்தால் என்ன பயன் ?மடத்தனமாக நானும் தமிழை துறை போக கற்பதால் என்ன பயன் உண்டு ?கலைமாணி பட்டத்தை  வேறு   துறையில் பயிலலாம் .என முடிவுக்கு வந்தாலும் தமிழை போல் இனிதான மொழி எங்கினும் காண்கிலேன் .

இந்த ஆக்கத்தை படிப்பவர்கள் தயவு செய்து சொல்லுங்கள் என் நண்பனின் கேள்விக்கான விடையை .எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது .

1 comment: