சரித்திரத்தின்
அந்தப் பக்கங்களை
புரட்டிப்பார்க்கிறேன்
பள்ளிக்காலம்
பாடம் கற்றுத்தரவில்லை
பருவ வயது
பக்குவப்படுத்தவில்லை
இணைப்பாடவிதானம்
ஈடுகொடுக்கவில்லை
உறவுகள்
ஊ க்கப்படுத்தவில்லை
உணர்வுகள்
உறுதிப்படுத்தவில்லை
நீ நீயாக இல்லை .
தோழனே ,
எடிசனுக்கு ஊகக்கம்
தந்தவர் யார் ?
ஆப்ரகாம் லிங்கன்
எப்படி ஜனதிபதியானான் ?
சோக்ரடீசுக்கு
தத்துவம்
பயிற்றுவித்தவர் யார்?
இவை உனக்குள் நீ
தொடுக்கவேண்டிய
வினாக்கள்.
நண்பனே
நட்புக்கள் -உன் மீது
நாட்டியம் பயின்றாலும்
நடை பயில வேண்டியது
நீ தான் .
உன் உதவும் கரங்கள் தான்
உனக்கு முதுகெலும்பு
உறுதியோடு போராடு
விளக்கில் விழுந்து சாக -நீ
விட்டில் பூச்சியல்ல .
பாரெங்கும் பறந்து திரியும்
பட்டாம் பூச்சி என்பதை
புரிவாய் .
//உன் உதவும் கரங்கள் தான்
ReplyDeleteஉனக்கு முதுகெலும்பு
உறுதியோடு போராடு
விளக்கில் விழுந்து சாக -நீ
விட்டில் பூச்சியல்ல .
பாரெங்கும் பறந்து திரியும்
பட்டாம் பூச்சி என்பதை
புரிவாய் . // மிக அருமையான வரிகள்! வாழ்த்துக்கள் சகி!