Sunday, October 15, 2017

-பொம்புள- பத்தி- 03

அவளுக்கு என்ன பிடிக்குமோ அதனை தான் செய்வாள்.மற்றவர்களுக்காக வேண்டி தன்னை மாற்றியமைப்பதில் ஒருபோதும் உடன்பாடு இருந்தது கிடையாது. அவளை படுமோசமாக விமர்சிப்பவர்கள் குறித்து விசாரிப்பதானும் அநாவசியமாகப்பட்டது,பொம்புள என்கிற ஒரே காரணத்துக்காக அவளை வீழ்த்த நினைப்பதனை நன்கறிவாள்.அவளிடம் சிரித்துப்பேசும் பலருக்கு முகத்துகக்கு முகம் பேச தையரியமிரிக்காது,ஆனால் அவளுக்கு மனதில் என்ன படுகிறதோ அதனை பேசிவிடுவாள்,தாம் சொல்ல நினைப்பதனை விழுங்காமல் பயப்படாமல் சொல்வதில் உள்ள திருப்தி எதிலும் கிடைப்பதில்லை.அவளுடன் பலர் முகத்துக்கு முகம் பேச துப்பற்று பின்னாடியே பயந்து கொண்டு பேசுவார்கள் அப்படி கதைத்தவர்கள் யாரென விசாரிப்பதும் இல்லை.புன்னகையால் கடந்து செல்வது போல் சந்மோஷம் எதிலும் இல்ல.

பொதுவாக ஆண்கள் சிலருக்கு பெண்களின் முன்னேற்றம் தாங்கிக்கொள்ளக்கூடியதாக இருப்பதில்லை,  அந்த மனநிலை திருத்த முடியாதது. அதற்கு பெண்ணானவள் விவாதத்திற்கு செல்வாளாக இருந்தால் முட்டாள் தனமாகவே எப்போதும் கருதுவாள்,

ஒரு முறை பிரியாவிடை நிகழ்வொன்றில் அவள் பிரியாவிடைபெறும் நபரை வாழ்த்திப்பேசும் போது இருப்புக்கொள்ள முடியாத சமயம் போதிக்கும் இரு ஆண்கள் ஆஹா ஓஹோ என காடையர்கள் போன்று சத்தம் எழுப்பினர்,அதனைப்புரிந்து கொண்ட பணிப்பாளர் தக்கவிதத்தில் எடுத்துக்கூறினார்,அந்த பணிப்பாரும் பெண் என்பதனால் இரு சமயவாதிகளும் இன்னும் இருவரை சேர்த்துக்கொண்டு சபை இங்கிதம் தெரியாது கூக்கிரலிட்டு அவரின் பேச்சை செவிமடுக்காதிருந்தனர்,இந்த விடயத்தினை நாங்கள் எவ்வாறு அணுக வேண்டும் என்று யாரிடமும் ஆலோசனை பெற முடியாது,இது ஒரு வருத்தம்  அதுவும் குணப்படுத்த முடியாத வருத்தம்.இதற்கு பெயர் தாங்கிக்கொள்ளமுடியாமை எனலாம்.அதாவது நாங்களே பொட்டயல் போல உட்காந்திருக்க பொம்புள என்ன பேசுறது?என்ற உளைச்சல் தான்.

இப்படிபட்ட லூசுகளை எங்க ஊரில் குத்தியில் போடனும் என்பார்கள்.அதற்கும் அடங்குங்களோ தெரியாது.எனவே நாம் செல்லும் திசையில் தொடர்ச்சியாக பயணிக்க வேண்டியது தான்.பெண்ணானவள் இதுகளை திரும்பி பார்த்துக்கொண்டும் பதில் அளித்துக்கொண்டும் இருந்தால் நேரம் தான் வீணாகும்.
இதுவும் கடந்து போவாள் பொம்புள, ,
தொடர்வாள்...

No comments:

Post a Comment