Saturday, October 7, 2017

விழித்துக்கொண்டதா சமூகம்??

முஸ்டீன் தன்னுடைய சிறுகதைகளில் சிலவற்றைத்   தொகுத்து வெளியிடும் போது நான் கேட்ட விடயம் "இவ்வளவு துணிச்சலாக அரசியலை பதிவு செய்கிறீர்களே உங்களுக்கு இந்த அரசாங்கத்தால் பிரச்சனை வராதா?"என்றதற்கு அவர் சொன்ன பதில் "அதனால் தான் இந்த தொகுப்பில் ஹராங்குட்டி சிறுகதையைச் சேர்த்து தொகுதிக்கும் ஹராங்குட்டி என்று பெயர் வைத்துள்ளேன் இந்த சமூகம் ஹராங்குட்டி என்ற சொல்லுக்கு பின்னால் தான் தொங்கிக்கொண்டு திரியும் எனக்கெதிராக பிட்டிசம் அடிக்கவெல்லாம் நேரமிக்காது இந்த சல்ஜாப்புக்கூட்டமெல்லாம் பெயரப்பார்த்திட்டே வாசிக்காம போயிரும் அதனால் எனக்கு பிரச்சினையும் குறையும்.அதையும் தாண்டி வாசிப்பது என்றால் இந்த ஹாரங்குட்டி கதையை மட்டும் தான் வாசிப்பானுங்க.வாசித்து விட்டு முஸ்டீன் மௌலவிமார்களுக்கு எதிராகவும் இஸ்லாத்திற்கு எதிராகவும் எழுதியிருக்கான் என்டு பிரச்சாரம் பண்ணுவானுங்க.கடைசியா இந்த சமூகத்த காட்டிக்கொடுத்திட்டான் என்டு முத்திரைய குத்துவானுங்க.ஒன்டுக்கும் ஆத்தாம போனால் என்னை ஹராங்குட்டி என்டு சொல்லி அவன் சுய இன்பம் காண்பான்.இது தான் கேடு கெட்ட சோனிகளின் நிலை அவ்வளவு தான் இந்த சமூகம்" என்று அலுத்துக்கொண்டார்.

சிறுகதை தொகுதி வெளிவந்த பின்னர் அது தான் நடந்தது.கல்முனையில் நடக்க இருந்த நூல் வெளியீட்டு நிகழ்வை சிலர் தடுத்து நிறுத்தி சுய இன்பம் கண்டனர்.ஹராங்குட்டி சிறுகதையை பேசு பொருளாக்கி முஸ்டீனை எவ்வளவுக்கெவ்வளவு கழுவி ஊத்த ஏலுமோ அவ்வளவுக்கவ்வளவு கழுவிய சுரனை கெட்டோர் பிழைக்கும் தவறுக்கும் துனை போய் தங்கள் நிலைப்பாட்டையும் வயிற்றுப்பிழைப்பையும் தக்க வைப்பதில் நியாயம் கண்டனர்.அப்பாவிச் சிறார்கள் துஸ்பிரயோகங்களுக்கு உட்படுவதனைக்கண்டும் நம் சமூகத்திலுள்ளோரை நாமே காட்டிக்கொடுப்பதுபோலாகிவிடும் என்றும் நம்முடைய சமூகப் பிரச்சனை அடுத்த சமயத்தவர்களுக்கு தெரியக்கூடாது என்று சொல்லி நித்தியானந்த சுவாமி பற்றியும் கிறிஸ்தவ பாதிரி பற்றியும் ஹாமுதுரு பற்றியும்  கதையளந்து துர் நாற்றம் பரப்பி தன் சமூகத்திலுள்ள சாக்கடைகளுக்கு அத்தர் தெளித்து பூட்டி வைத்தார்கள்.

"இந்த சமூகம் எக்கேடு கெட்டாவது போகட்டும் எனக்கென்ன வந்தது? " எனக் கூறி என்னை சமாதானப்படுத்தினார் முஸ்டீன். இந்த சமூகம் குறித்தும் கவலைப்பட்ட போது ஒரு நாளைக்கு உமர் வருவார் சாட்டையைக் கையிலெடுப்பார் எனத் தேற்றினார்.அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என நினைக்கிறேன்.எமது சமூகம் விழித்துக்கொண்டுள்ளது.இன்றைய தலைமுறை தவறை தவறு என சொல்லத் துணிந்திருக்கிறது என்பதை பல பதிவுகள் வாயிலாக வாசிக்க கிடைக்கிறது.அநாதைச் சிறுமிகள் துஸ்பிரயோகம் தொடர்பில் இரண்டு மாதங்களுக்கு முன் என்னுடன் நீண்ட நேரம் உரையாடிய சிரேஷ்ட பெண் ஊடகவியலாளர் தான் கொண்ட சமூக நலத்தை வெளிப்படுத்த  நம்மாள் எதுவும் செய்ய முடியாதுள்ளதே என கலங்கி நின்றார்.ஆனால் இரண்டு மாதங்களுக்குப்பிறகாவது நமது சமூகம் சிந்திக்க தலைப்பட்டிருப்பது சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கிய பயணம் என்றே எண்ணத்தோனுகிறது.

இப்படி நான் எழுதும் போது இன்னொன்று நினைவு வருகிறது.இதனை வாசிக்கும் சுரனை கெட்ட கூட்டிக்கொடுக்கும் சில சோனிங்க பட்டானி ராசிக்கின் கொலையையும் முஸ்டீ னையும் தொடர்பு படுத்தி ஒரு பின்னூட்டம் இடும்.ஒன்றுக்கும் லாயிக்கில்லாதவர்களால் செய்யக்கூடிய உச்ச பட்ச சமூக சீர்திருத்தம் என்பது தன்னால் எதுவும் முடியாது என்ற போது  எதையாவது குத்தி நாற்றம் வரவழைத்து மோந்து பார்ப்பது தான். அதனை விட பெரிய இன்பம் எதுவுமில்லை. அது தான் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இவை அனைத்தையும் கடந்து சில இள இரத்தங்கள் சமூகத்திற்காய் பேசும்.

No comments:

Post a Comment